விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, January 17, 2012

    சபரிமலைக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர் சுடுநீர் ஊற்றி கொலை


    சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர் சுடுதண்ணீர் ஊற்றி கொல்லப்பட்டார் என்று, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவேற்காடு திருவேங்டகம் தெருவைச் சேர்ந்தவர் சாந்தவேல் (39). பிளம்பிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு தட்ஷனி (12), சஞ்சனா(9) என்ற மகள்கள் உள்ளனர். சாந்தவேல் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். கடந்த 6ம் தேதி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த சந்திரசாமி என்பவரது தலைமையில் 80 பேர் மாலை போட்டு சபரிமலைக்கு ரயிலில் சென்றனர். இவர்களுடன் சாந்தவேலும் சென்றார்.

    9ம்தேதி, கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு போன் வந்தது. அதில் பேசிய கோட்டயம் போலீஸ்காரர் ஒருவர், “உங்கள் கணவருக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா, உறவினர்களை அழைத்துக் கொண்டு கோட்டயத்துக்கு சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் சாந்தவேல், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதை கண்டு கதறி அழுதார்.

    சம்பவம் நடந்து எப்படி? என்று சாந்தவேலிடம் கேட்டனர். அப்போது அவர், “பம்பையில் உள்ள டீக்கடைக்கு சென்றேன். அப்போது, மலையாளி டீக்கடைக்காரர் என் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட்டார்’’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, சித்ரா கணவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11ம் தேதி காலை சிகிச்சைக்காக சேர்த்தார்.  நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தவேல் பரிதாபமாக இறந்து போனார்.

    இதனை கண்டு அவரது உறவினர்கள் மிகுந்த ஆத்திரமடைந்தனர். சாந்தவேலின் சகோதரர் பொன்வேல், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.  மாலையில் சாந்தவேல் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது தம்பி பழனிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் சாந்தவேல், சபரிமலைக்கு முதல் முறையாக மாலை போட்டார்.

    இவரது நண்பர் ரமேஷ் மூலம் குருசாமியான சந்திரசாமி என்பவருடன் சபரிமலைக்கு சென்றார். அங்கு டீக்கடை பாய்லரில் ரூபாய் நோட்டை ஒட்டி காயவைத்துள்ளார். அப்போது, சில வார்த்தைகள் தமிழில் பேசியுள்ளார். இதைக் கேட்ட டீக்கடைக்காரர் உடனே பாய்லரில் இருந்த சுடுதண்ணீரை முதுகில் ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் கிடந்த அவரை, சில தமிழர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்த பிறகு சந்திரசாமியிடம் சென்று கேட்டேன். ஆனால், அண்ணன் பற்றி எனக்கு தெரியாது என்று முரணான தகவல்களை தெரிவித்தார். 

    கோட்டயம் போலீசுக்கு வழக்கு மாற்றம்

    கீழ்ப்பாக்கம் போலீசார் சந்திரசாமியை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அப்போதும் அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறுகிறார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் கோட்டயம் போலீசாரிடம் அங்கு நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாந்தவேல் டீக்கடை பாய்லரில் ரூபாய் நோட்டை காய வைத்தபோது, எதிர்பாராதவிதமாக அது கீழே விழுந்துள்ளது. அப்போது, சுடுதண்ணீர் அவரது முதுகில் பட்டுவிட்டது. மற்றபடி வேறு ஏதும் காரணங்கள் இல்லை. ஆனாலும், புகார் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக கோட்டயம் போலீசாருக்கு தற்போது வழக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.


    Posted by விழியே பேசு... at 9:44 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.