கேரள மாநிலம் கொல்லம் கடலில் கடந்த 15-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் தமிழக மீனவர்கள் அஜிஸ் பிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டு பாய்ந்து இறந்தனர். இதுதொடர்பாக இத்தாலி கப்பல் வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும் இத்தாலி கப்பலில் இருந்து மீனவர்களை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இத்தாலி கப்பல் வீரர்களான லஸ்தோரே மாசிமலியானோ, சால்வத்தோரே ஜிரோன் ஆகிய 2 பேரும் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிய வீரர்களை மீட்கும் முயற்சியில் அந்நாடு பலவித முயற்சிகளை மேற்கொண்டது. பலியானோரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்க முதலில் தயக்கம் காட்டிய இத்தாலி அரசு, தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இத்தாலி அரசு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும் இத்தாலிய வீரர்கள் மீதான கேரள அரசின் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment