ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 147 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கேப்டன் ஷேவாக்கின் அதிரடியில் ஆட்டம் மூலம் 16வது ஓவரிலேயே வெற்றிக் கனியை பறித்தது.
ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் ரன் கணக்கை துவக்காமலேயே இர்பான் பதானின் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரில் கேப்டன் செளரவ் கங்குலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதன்பிறகு வந்த மனீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா உடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். மனீஷ் பாண்டே 3 முறை கேட்ச் கொடுத்தும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் கோட்டைவிட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மனீஷ் பாண்டே 56 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 7 பவுண்டரிகளை விளாசி 80 ரன்களை குவித்தார்.
ராபின் உத்தப்பா துவக்கம் முதலே பொறுமையாக ஆடினர். 56 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளை அடித்து 60 ரன்களை சேர்த்தார். இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 146 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக இர்பான் பதான், மோனி மார்கல் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
147 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இந்த நிலையில் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயவர்த்தனே 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
அதன்பிறகு கேப்டன் ஷேவாக் உடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். ஷேவாக் அதிரடியை தொடர, பீட்டர்சன் பொறுமையாக ஆடி வந்தார். ஷேவாக் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 21 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த பீட்டர்சன் 27 ரன்கள் எடுத்த ஜெஸ்ஸி ரைடரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
16வது ஓவரில் வெற்றிப் பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசிய ஷேவாக் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் ஷேவாக் 48 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் விளாசி 87 ரன்களை குவித்தார்.
No comments:
Post a Comment