விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, June 28, 2011

    திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் கலந்த காதல்...?கல்யாணம்...?





    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்தவர் அனில் தியாகி. இவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருடைய மூத்த மகள் நேகா. இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதிஷ் என்ற வாலிபருக்கும் கடந்த 6 ந் தேதி ருத்ராபூரில் திருமணம் நடைபெற இருந்தது. மணமக்கள் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு முதல் நாள் நேகா தனது காதலருடன் ஓடிப்போய்விட்டார்.

    அழைப்பிதழ்கள் கொடுத்து திருமணத்துக்கு உறவினர்களெல்லாம் வரத்தொடங்கி விட்ட நிலையில் மணமகள் ஓடிவிட்டதால் இரு வீட்டாரும் என்ன செய்வது என்று குழப்பம் அடைந்தனர்.


    இதனால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கவும், மணமகன் உறவினர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவும், மணமகளின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் அனில் தியாகிக்கு திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதே முகூர்த்தத்தில் தனது இரண்டாவது மகள் ஆர்த்தியை நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதை ஆர்த்தியிடம் கூறி அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.


    உடனே மணமகன் நிதிஷின் பெற்றோரை சந்தித்து இதுபற்றி அவர்களிடம் கூறினார். அவர்களும் ஆர்த்தியை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி 6 ந் தேதி அதே முகூர்த்தத்தில் நிதிஷுக்கும், ஆர்த்திக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.



    தனி அறையில் முதல் இரவை மகிழ்ச்சியுடன் கழிக்க நிதிஷ் ஆயிரம் கனவுகளுடன் மிதந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஆர்த்தி அவரது தலையில் பெரிய குண்டு' ஒன்றை தூக்கி போட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

    வினீத் என்பவரை தான் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், சில நாட்களுக்கு முன் அவரை கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். அக்காள் நேகா அவளது திருமணத்துக்கு முதல் நாள் காதலனுடன் ஓடி விட்டதால் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக திருமணத்துக்கு தான் சம்மதித்ததாகவும் தனது கணவர் நிதிஷிடம் ஆர்த்தி கூறினார்.


    இதைக் கேட்டு ஆடிப்போன நிதிஷுக்கு உடனடியாக என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதல் இரவு கனவுகளெல்லாம் கானல் நீராக மாற உற்சாகம் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது. சிறிது நேரம் யோசித்த அவர், தனக்கு ஏற்பட்ட பெரும் சோகம், அவமானத்தை தாங்கிக்கொண்டு ஆர்த்தியை சகோதரியாக ஏற்று, அவரை அவருடைய காதலருடனேயே சேர்த்து வைப்பது என்று முடிவு செய்தார்.


    உடனே நிதிஷ் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி, ஆர்த்தியை தனது சகோதரியாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர்களும் நிதிஷின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவரது யோசனையை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிதிஷை சகோதரனாக ஏற்கும் வகையில் அவரது கையில் ஆர்த்தி  ராக்கி' கயிறு கட்டினார்.


    நடந்த இந்த விவகாரங்கள் அனைத்தையும் பின்னர் ஆர்த்தியின் தந்தை அனில் தியாகியிடம் தெரிவித்த நிதிஷின் பெற்றோர், மருமகளாக வந்த ஆர்த்தியை தங்கள் மகளாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் கூறினார்கள்.



    ஆனால் இதை விரும்பாத அனில் தியாகி, நிதிஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்தாக கூறப்படுகிறது. என்றாலும் ஆர்த்தியை அவரது காதலர் வினீத்துடன் சேர்ந்து வைக்க நிதிஷும், அவரது பெற்றோரும் முயன்றனர்.

    அப்போது இன்னொரு புதிய சிக்கல் ஏற்பட்டது. ஊர் அறிய இன்னொருவரை மணம் புரிந்த ஆர்த்தியை வினீத் தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

    இதனால் இந்த விவகாரம் மீரட் நகர போலீசுக்கு சென்றது. இப்படி ஒரு விசித்திர வழக்கை அவர்கள் இதுவரை சந்திக்கவில்லை என்பதால், நிதிஷையும், ஆர்த்தியையும் மாவட்ட குடும்ப கவுன்சிலிங் மையத்துக்கு அழைத்து அங்குள்ள நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். "நடந்தது நடந்து விட்டது, ஆர்த்தியை அவரது காதலர் வினீத் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து விடுங்கள்'' என்று யோசனை கூறினார்கள்.


    அதற்கு நிதிஷும், ஆர்த்தியும்; "நாங்கள் ஒருவரை ஒருவர் சகோதரர் சகோதரியாக ஏற்றுக்கொண்டு விட்டோம். எனவே இனி கணவன் மனைவியாக வாழ முடியாது'' என்று உறுதியாக கூறி விட்டனர்.

    இதைத்தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கிய ஆலோசகர்கள், வினீத்தை வரவழைத்து பேச முயன்றனர். ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வர மறுத்து விட்டார்.



    இதனால், கவுன்சிலிங் வழங்கியவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்த்தி தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருக்க முடிவு செய்து உள்ளார். அவரை அவரது காதலர் வினீத் மனம் மாறி ஏற்றுக்கொள்வாரா? என்று தெரியவில்லை.

    நிதிஷின் நிலைமை இன்னும் பரிதாபமானது. நிச்சயிக்கப்பட்ட நேகா கைநழுவிப் போக, அவரது தங்கை ஆர்த்தியை மணந்தார். அவரும்  அண்ணா' என்று கூறி  ராக்கி' கட்டிவிட, தனது சோகத்தையும் மறந்து அவரை காதலர் வினீத்துடன் எப்படியாவது சேர்த்து வைத்து விடுவது என்று போராடிக்கொண்டு இருக்கிறார்.


    நிதிஷ் ஆர்த்தி வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.       


    Posted by விழியே பேசு... at 8:30 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ▼  June (616)
      • பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்
      • இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர...
      • தமிழர்களை ஏமாற்றாதீர்கள் மன்மோகன்-நெடுமாறன் எச்சரி...
      • பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே
      • ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலா...
      • உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்!
      • வேங்கையை வாங்கிய திமுக விவிஐபி
      • ராணாவில் வடிவேலு இருக்காரா? கே.எஸ்.ரவிகுமார் பதில்
      • விஜய்யிடம் விசேஷ மாற்றம்?
      • விரைவில் 'சுகோயில்' பறக்கவிருக்கும் சச்சின், டோணி
      • அரசியல்வாதிகளெல்லாம் வெளியே போங்கப்பா- ஐசிசி அதிரடி!
      • ஸாரி, இன்னிக்கு ரீசார்ஜ் கிடையாது!
      • உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ வெடிபொருள் கடத்தல்!
      • 2ஜி ஊழல்-அப்ரூவராவாரா கனிமொழி?
      • பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...
      • சீனாவின் ஒப்பிடுகையில் நாம் சுண்டைக்காய்- மன்மோகன்
      • ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
      • திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் க...
      • திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!
      • நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி வ...
      • இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா
      • ரஜினியின் 'அழைப்புகள்'!!
      • மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்
      • பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!
      • சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
      • மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுட...
      • மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!
      • மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!...
      • காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது -ஜெ...
      •  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீ...
      • பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ...
      • 'சண்டை' போடாதீங்க-ரஜினிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
      • தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரச...
      • அப்துல்கலாம் கொடுத்த புத்தகம் : நடிகர் விவேக்
      • இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்
      • இந்திய அரசு எனக்கு விருது தர வேண்டும் : நாஞ்சில் ச...
      • விஜய் பட தயாரிப்பாளர் கைது
      • ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்- மதிமுக மாநாட்டில் தீர...
      • மசோதாக்களை உருவாக்குவதில் இனி மக்கள் பிரதிநிதிகளுக...
      • ரஜினியை காப்பி அடிக்கவில்லை- நஸ்ருதீன் ஷா
      • ஹர்ஷிகாவின் இரு கண்கள்!
      • இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
      • கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...
      • 'அதப் பத்தி எழுதாதே': நிருபர்களுக்கு ஆசின் டோஸ்!
      • அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்...
      • ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...
      • சாய்பாபா ஆசிரமத்தில் கொள்ளை புட்டபர்த்தி மக்கள் போ...
      • வெளியூர்களில் 1-ந்தேதி முதல் மின்வெட்டு 3 மணியில் ...
      • வாஸ்துவாவது, மாற்றமாவது... ரஜினி வீட்டு செய்தியில்...
      • ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
      • பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!
      • காவல் நிலையத்தில் 'கலாட்டா' செய்த தேமுதிக எம்எல்ஏ:...
      • சீமானுக்கு ஆப்ப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வ...
      • தனுஷின் புதிய அவதாரம்!
      • ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
      • இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர...
      • முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாண...
      • நடிகர் தனுஷ் நடித்த வேங்கை படத்துக்கு இடைக்கால தடை
      • சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்
      • வரிச்சலுகை உண்டா இல்லையா?
      • ''புதிய அலைகள்'' அணியின் வெற்றி!
      • ரஜினி நலம்... ரசிகைகள் நேர்த்திகடன்
      • ஒசாமாவின் கடைசி கடிதம் !
      • முன்னாள் காதலி ஐஸ்வர்யாராய்க்கு வாழ்த்து சொன்ன சல்...
      • தொடரும் விஜயகாந்தின் ரௌடிசம் : மகனுக்கு சீட் மறுப...
      • பின்லேடனின் செல்போன்கள் மூலம் பின்லேடன்- ஐஎஸ்ஐ தொட...
      • வாலியுடன் விஜயகாந்த் சந்திப்பு அரசியல் ஆலோசனைகளா?
      • மகனுக்கு வீடு வாங்க கடன் வாங்கிய சச்சின்!
      • சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
      • மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழ...
      • ரஜினி வழியில் விஜய்!
      • கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா!
      • பாடல் ஆசிரியரான லாரன்ஸ்!
      • ரஜினிகாந்த் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்...
      • 12ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்
      • பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி
      • 'மங்காத்தா' ரிலீஸ் தியதி !
      • விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்
      • வெற்றி ‌தோல்வி என்னை பாதிக்காது: ஹாரிஸ் ஜெயராஜ்!
      • செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூ...
      • அஜித்தின் புதிய அவதாரம் பில்லா
      • போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்
      • பாலா படத்தில் நடிக்க ஆசை: சோனியா அகர்வால்!
      • கிருஷ்ண லீலை தாமதம்! கண்ணீர் வடிக்கும் டைரக்டர்!!
      • ஹன்சிகாவின் தொழில் பக்தி!
      • கமலுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் மற்றொரு பாலிவுட் நட...
      • அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த...
      • ஜூலை 15ல் பிரசாந்தின் மம்பட்டியான்!
      • ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!
      • அமலா பால்க்கு அக்காவான சமீரா!
      • நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் 3ம்தேதி நடக்கிற...
      • மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான்.
      • இராமாயண வாலியா ரஜினி?
      • அது ரஜினி எழுதிய கடிதமா? சந்தேகம் கிளப்பும் பிரமுக...
      • மனிதனாக இரு சல்மான்கான்
      • அவன் இவன்.... வசூலில் சாதனை!
      • கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
      • கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரம்: எடியூரப்பா பி...
      • 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
      • சொத்துகள் பறிபோனால் என் செய்வது : சிறையில் மெழுகுவ...
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.