விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, June 30, 2011

    பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே

    செய்வதை எல்லாம் செய்து விட்டு, இப்போது ஆப்பில் சிக்கிய குரங்கின் நிலையில் உள்ள இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே, தனக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையே பூசல் ஏற்பட, மோதல் ஏற்பட, எதிரிகளாக மாறியதற்கு இந்திய உளவு அமைப்பான ரா தான் காரணம். அது செய்த சதியால்தான் தானும், பொன்சேகாவும் எதிரும் புதிருமாக மாறி விட்டதாக பிதற்றியுள்ளார்.

    இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக தண்டனை உறுதி என்ற நிலையை நோக்கி ராஜபக்சே கும்பல் போய்க் கொண்டிருக்கிறது. ஈழத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தைப் பார்த்து சர்வதேச சமுதாயம் படிப்படியாக கவலைக்குள் மூழ்க ஆரம்பித்துள்ளது. ஒட்டுமொத்த சர்வதேசமும் ராஜபக்சே கும்பலுக்கு எதிராக திரளும் நாள் அருகில் இல்லாவிட்டாலும், வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள்.

    காமன்வெல்த் நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து என அடுத்தடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அடுக்கப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் வழக்கு தொடரப் போவதாக கூறப்படுகிறது.

    இப்படி அடுக்கடுக்காக சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் குழம்பிப் புலம்பி வருகிறார் ராஜபக்சே.

    இந்த நிலையில் சரத் பொன்சேகா மீது திடீர் பாசத்தைக் காட்டுவது போல பேசியுள்ளார் ராஜபக்சே. இருவருக்கும் இடையே பகையை மூட்டி எதிரிகளாக மாற்றியதே இந்தியாவின் உளவு அமைப்பான ரா தான் என்றும் பேசியுள்ளார் அவர்.

    இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இப்படிக் கூறினாராம் ராஜபக்சே.

    இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே ராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு. இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம்.

    சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடத்தி விட்டது. அதன் பின்பு தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதை விடப் பெரும் தவறாகும்.

    சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்று அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

    அவ்வாறு இல்லாமல் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் ராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

    அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

    ராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளுடன் ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

    வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்று புலம்பினாராம் ராஜபக்சே.

    உண்மையில் ஈழத் தமிழ் இனப் படுகொலையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு பொன்சேகாவுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ராஜபக்சே புலம்புவதைப் பார்த்தால் பொன்சேகாவை தன் பக்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக மாறி, சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் வழிகளைக் காண முயற்சிப்பாரோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.




    Posted by விழியே பேசு... at 10:23 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ▼  June (616)
      • பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்
      • இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர...
      • தமிழர்களை ஏமாற்றாதீர்கள் மன்மோகன்-நெடுமாறன் எச்சரி...
      • பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே
      • ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலா...
      • உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்!
      • வேங்கையை வாங்கிய திமுக விவிஐபி
      • ராணாவில் வடிவேலு இருக்காரா? கே.எஸ்.ரவிகுமார் பதில்
      • விஜய்யிடம் விசேஷ மாற்றம்?
      • விரைவில் 'சுகோயில்' பறக்கவிருக்கும் சச்சின், டோணி
      • அரசியல்வாதிகளெல்லாம் வெளியே போங்கப்பா- ஐசிசி அதிரடி!
      • ஸாரி, இன்னிக்கு ரீசார்ஜ் கிடையாது!
      • உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ வெடிபொருள் கடத்தல்!
      • 2ஜி ஊழல்-அப்ரூவராவாரா கனிமொழி?
      • பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...
      • சீனாவின் ஒப்பிடுகையில் நாம் சுண்டைக்காய்- மன்மோகன்
      • ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
      • திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் க...
      • திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!
      • நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி வ...
      • இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா
      • ரஜினியின் 'அழைப்புகள்'!!
      • மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்
      • பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!
      • சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
      • மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுட...
      • மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!
      • மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!...
      • காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது -ஜெ...
      •  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீ...
      • பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ...
      • 'சண்டை' போடாதீங்க-ரஜினிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
      • தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரச...
      • அப்துல்கலாம் கொடுத்த புத்தகம் : நடிகர் விவேக்
      • இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்
      • இந்திய அரசு எனக்கு விருது தர வேண்டும் : நாஞ்சில் ச...
      • விஜய் பட தயாரிப்பாளர் கைது
      • ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்- மதிமுக மாநாட்டில் தீர...
      • மசோதாக்களை உருவாக்குவதில் இனி மக்கள் பிரதிநிதிகளுக...
      • ரஜினியை காப்பி அடிக்கவில்லை- நஸ்ருதீன் ஷா
      • ஹர்ஷிகாவின் இரு கண்கள்!
      • இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
      • கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...
      • 'அதப் பத்தி எழுதாதே': நிருபர்களுக்கு ஆசின் டோஸ்!
      • அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்...
      • ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...
      • சாய்பாபா ஆசிரமத்தில் கொள்ளை புட்டபர்த்தி மக்கள் போ...
      • வெளியூர்களில் 1-ந்தேதி முதல் மின்வெட்டு 3 மணியில் ...
      • வாஸ்துவாவது, மாற்றமாவது... ரஜினி வீட்டு செய்தியில்...
      • ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
      • பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!
      • காவல் நிலையத்தில் 'கலாட்டா' செய்த தேமுதிக எம்எல்ஏ:...
      • சீமானுக்கு ஆப்ப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வ...
      • தனுஷின் புதிய அவதாரம்!
      • ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
      • இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர...
      • முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாண...
      • நடிகர் தனுஷ் நடித்த வேங்கை படத்துக்கு இடைக்கால தடை
      • சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்
      • வரிச்சலுகை உண்டா இல்லையா?
      • ''புதிய அலைகள்'' அணியின் வெற்றி!
      • ரஜினி நலம்... ரசிகைகள் நேர்த்திகடன்
      • ஒசாமாவின் கடைசி கடிதம் !
      • முன்னாள் காதலி ஐஸ்வர்யாராய்க்கு வாழ்த்து சொன்ன சல்...
      • தொடரும் விஜயகாந்தின் ரௌடிசம் : மகனுக்கு சீட் மறுப...
      • பின்லேடனின் செல்போன்கள் மூலம் பின்லேடன்- ஐஎஸ்ஐ தொட...
      • வாலியுடன் விஜயகாந்த் சந்திப்பு அரசியல் ஆலோசனைகளா?
      • மகனுக்கு வீடு வாங்க கடன் வாங்கிய சச்சின்!
      • சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
      • மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழ...
      • ரஜினி வழியில் விஜய்!
      • கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா!
      • பாடல் ஆசிரியரான லாரன்ஸ்!
      • ரஜினிகாந்த் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்...
      • 12ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்
      • பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி
      • 'மங்காத்தா' ரிலீஸ் தியதி !
      • விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்
      • வெற்றி ‌தோல்வி என்னை பாதிக்காது: ஹாரிஸ் ஜெயராஜ்!
      • செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூ...
      • அஜித்தின் புதிய அவதாரம் பில்லா
      • போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்
      • பாலா படத்தில் நடிக்க ஆசை: சோனியா அகர்வால்!
      • கிருஷ்ண லீலை தாமதம்! கண்ணீர் வடிக்கும் டைரக்டர்!!
      • ஹன்சிகாவின் தொழில் பக்தி!
      • கமலுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் மற்றொரு பாலிவுட் நட...
      • அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த...
      • ஜூலை 15ல் பிரசாந்தின் மம்பட்டியான்!
      • ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!
      • அமலா பால்க்கு அக்காவான சமீரா!
      • நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் 3ம்தேதி நடக்கிற...
      • மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான்.
      • இராமாயண வாலியா ரஜினி?
      • அது ரஜினி எழுதிய கடிதமா? சந்தேகம் கிளப்பும் பிரமுக...
      • மனிதனாக இரு சல்மான்கான்
      • அவன் இவன்.... வசூலில் சாதனை!
      • கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
      • கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரம்: எடியூரப்பா பி...
      • 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
      • சொத்துகள் பறிபோனால் என் செய்வது : சிறையில் மெழுகுவ...
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.