நாட்டில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 3ஜி சேவைகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஏர்டெல்லின் 4ஜி தொழில்நுட்ப சேவை அறிமுக விழாவில் அவர் பேசியதாவது:
நமது நாட்டில் ஓராண்டுக்கு முன்பு 3ஜி சேவைகள் அறிமுகப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. பெரும்தொகை கொடுத்து அலைவரிசையை வாங்கியவர்கள் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாமல் விட்டனர். இதனால் அது வெற்றிகரமானதாக இல்லாமல் போய்விட்டது.
நாட்டின் புதிய தொலைத்தொடர்பு கொள்கை மே மாதத்தில் அறிவிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுசார் கொள்கை அனேகமாக இந்த மாதத்தில் வெளியிடப்படக் கூடும்.
தற்போது ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் 4ஜி தொழில்நுட்பம் பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையில்தான் உள்ளது. உண்மையான 4ஜி தொழில்நுட்பம் 700 மெகாஹெட்ஸ் வரையிலான வேகத்தைக் கொண்டது. அனேகமாக நடப்பு நிதியாண்டில் இது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் சைபர் தாக்குதல்களிலிருந்து தபிக்க தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகளில் பாதுகாப்புதான் மிகவும் அவசியமானது. அப்படிச் செய்யாமல்விட்டால் நாமே ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாகிவிடும் என்றார் கபில்சிபல்.
No comments:
Post a Comment