கூடங்குளம் அணுமின்நிலையத்தை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தை தொடர்ந்து அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஆயத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்கான தடையில்லா சான்று வழங்கும். இதைத் தொடர்ந்து ரியாக்டர் பாதுகாப்பு பரிசோதிக்கப்பட்டு இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் மற்றொரு கிளியரனஸ் ஒப்புதல் வழங்கும்.
இந்த ஒப்புதல்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் கிடைத்துவிடும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் முதலாவது அணு உலையில் யுரேனியம்” எரிபொருள் நிரப்பப்படும்.
எரிபொருள் நிரப்பி முதலில் பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையையும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேரில் கண்டறிந்து ஒப்புதல் வழங்கவேண்டும். எனவே ஜுன் மாத இறுதியில் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்படும். அதன் பிறகு அடுத்த 2 மாதத்தில் 2-வது அணுஉலையில் இருந்தும் மின்உற்பத்தி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய- ரஷ்ய விஞ்ஞானிகள் நேற்று நடந்த ஆலோசனையில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்கான தடையில்லா சான்று வழங்கும். இதைத் தொடர்ந்து ரியாக்டர் பாதுகாப்பு பரிசோதிக்கப்பட்டு இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் மற்றொரு கிளியரனஸ் ஒப்புதல் வழங்கும்.
இந்த ஒப்புதல்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் கிடைத்துவிடும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் முதலாவது அணு உலையில் யுரேனியம்” எரிபொருள் நிரப்பப்படும்.
எரிபொருள் நிரப்பி முதலில் பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையையும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேரில் கண்டறிந்து ஒப்புதல் வழங்கவேண்டும். எனவே ஜுன் மாத இறுதியில் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்படும். அதன் பிறகு அடுத்த 2 மாதத்தில் 2-வது அணுஉலையில் இருந்தும் மின்உற்பத்தி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய- ரஷ்ய விஞ்ஞானிகள் நேற்று நடந்த ஆலோசனையில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment