தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய அறுசுவை உணவை பாராட்டிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியை சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி விமர்சித்தார். இதைக் கேட்ட விஜய தாரணி, உண்மையைச் சொன்னேன் இது தப்பா என்று பொறுமித் தள்ளி விட்டார்.
சட்டசபையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய விஜய தாரணி, எனது விளவங்கோடு தொகுதியில் நடைபெற்ற உழவர் தின விழாவில் விவசாயிகளுடன் அமர்ந்து நானும் உணவருந்தினேன். விருந்து பிரமாதமாக இருந்தது என்று பாராட்டிப் பேசினார்.
இதைக் கேட்டதும் எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கூறுகையில், விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உரங்களின் விலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், இங்கே பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, விவசாயிகளுடன் உணவருந்திவிட்டு பேஷ் பேஷ் என்கிறார். இது நியாயமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த விஜய தாரணி, நடந்த உண்மையைச் சொன்னேன். அது தவறா என்றார். இப்படியாக விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment