மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன். என்.வரதராஜன் மரணம் உடல் நலக்கோளாறு காரணமாக அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் என்.வரதராஜன் மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. அவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
என்.வரதராஜன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள பாளையம் அருகே இருக்கும் கம்பிளியம்பட்டியில் பிறந்தவர். திண்டுக்கல்லில் உள்ள சவுந்தராஜா மில்லில் தொழிலாளியாக பணியாற்றினார்.
1943-ல் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கட்சியில் படிப்படியாக பல பதவிகளை வகித்தார். 3 முறை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்தார்.
இதேபோல 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு வேடசந்தூரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். 1977, 1980ம் ஆண்டுகளில் திண்டுக்கல்லில் இருந்து தேர்வு பெற்றார்.
என்.வரதராஜன் உடல் இன்று மாலை திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது.
No comments:
Post a Comment