குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு ரெயில் எரிக்கப்பட்டதால் அம்மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 1200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
கலவரத்தில் இறந்தவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜப்ரியும் ஒருவராவார். இவரது மனைவி ஜகியா ஜப்ரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திரமோடி, மாநில மக்களையும், உடமைகளையும் பாதுகாக்க தவறிவிட்டார். அதோடு கலவரத்துக்கு துணை போய் உள்ளார். இது தொடர்பாக அவர் உள்பட 72 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கை தயார் செய்தனர். இதற்கிடையே சில போலீஸ் அதிகாரிகளும் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
மோடி மீதான இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்கப்பட்டது. இந்த குழு ஜகியாவின் குற்றச்சாட்டை விசாரித்ததில் நரேந்திர மோடி மற்றும் 57 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், ஜகியாவுக்கு இது குறித்த ஆவணங்களை 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி அனைத்து ஆவணங்களும் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்த குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment