விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, May 28, 2011

    ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!


    தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

    புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

    எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

    கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

    எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

    எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

    இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

    ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

    இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

    சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

    அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

    அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

    பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

    அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

    இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 8:55 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.