வேலூர் மாவட்டம் நெமிலி அசநெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் இவருடைய மனைவி சூரியகலா. மகள்கள் நந்தினி, சிந்தாமணி. இருவரும் செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
மோகன் நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்தார். மகள் என்றுகூட பார்க்காமல் நந்தினியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி ஆத்திரத்தில் தந்தையை தாக்கினார். சிந்தாமணியும் சகோதரியுடன் சேர்ந்து தாக்கினார். மோகன் தரையில் சாய்ந்ததும் நந்தினி, சிந்தாமணி இருவரும் சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினர்.
மூச்சு திணறலில் துடிதுடித்த மோகன் வீட்டுக்குள்ளேயே பிணமானார். பின்னர் தாய் சூரியகலா மோகனின் பிணத்தை வீட்டுக்குள் அறையில் வைத்து பூட்டிவிட்டு மகள்கள், மகனுடன் தலைமறைவானார்.
இன்று காலை மோகனுடன் வேலைக்கு செல்பவர்கள் அவரை தேடி வந்தனர். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வாசலில் மோகனின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகன் பிணமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தலைமறைவாக இருந்த சூரியகலா மற்றும் அவரது மகள்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போதையில் தவறாக நடக்க முயன்றபோது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மகள்களே கொலை செய்தது தெரியவந்தது.
No comments:
Post a Comment