தென்சீனக் கடல் பகுதியின் உரிமை குறித்து சீனாவிற்கும், தைவான் மற்றும் 5 தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே நெடுங்காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்திருந்தது.
இந்தியாவின் இக்கருத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு நடத்தி வரும் `குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:-
தென் சீனக் கடல் பகுதி, உலக சொத்து என்று இந்தியா கூறுவது தவறு. சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய அந்த பகுதியில சர்வதேச சட்டப்படி, கடற்பயணம் செய்யும் உரிமையும், தடையற்ற வர்த்தகம் செய்யும் உரிமையும் மற்ற நாடுகளுக்கு இருக்கிறது.
இதற்கு சீனா எப்போதுமே ஆட்சேபணை தெரிவித்தது இல்லை. ஆனால் இந்த உரிமைகள், சீனாவின் இறையாண்மை உரிமையை மீறும் வகையில் இருக்கக்கூடாது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment