விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 23, 2011

    லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்திரமாக மீட்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை


    எகிப்தை தொடர்ந்து லிபியா நாட்டிலும், அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கடாபியின் ராணுவத்தினர், புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள்.

    வீதியில் இறங்கி போராடும் மக்கள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ராணுவத்தினரை எதிர்த்து மக்கள் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப்படுகின்றன.

    அரசு டெலிவிஷன் நிலையங்களும் சூறையாடப்பட்டன. தலைநகர் திரிபோலி அருகில் உள்ள கொரிய நாட்டு கட்டுமான நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் சூறையாடப்பட்டது. இந் கலவரத்தில் அங்கு பணிபுரிந்த கொரியா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்தனர்.

    லிபியா கலவரத்தில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2 ஆயிரம் பேர் வரை இறந்து இருப்பார்கள் என்று பென்காஸி நகரத்தை சேர்ந்தவர் கூறினார். பென்காஸி நகரில் தான் அதிக அளவு சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

    அங்கு போர் விமானங்கள் குண்டு வீசியதில் விமான ஓடுபாதை முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதால் அங்குள்ள வெளிநாட்டவர்களை விமானம் மூலம் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் கடாபி, வெனிசுலா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக முதலில் தகவல் வெளியானது.

    ஆனால், நேற்று டெலிவிஷனில் பேசிய கடாபி, தான் லிபியாவில் தான் இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், லிபியாவில் நடந்துவரும் கலவரத்தில் தமிழ்நட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியான தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

     கொரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா, தலைவன் கோட்டை, ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 30 தொழிலாளர்கள் மின்கோபுரம், காற்றாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நிறுவனம் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அவர்கள் தங்கி இருந்தனர்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. உடனே தமிழக தொழிலாளர்கள் பதறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினார்கள். அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகையா (வயது 40) என்பவர் குண்டு பாய்ந்து பலியானார்.

    நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார் (24) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய மற்ற 28 பேரும், அருகில் உள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்தனர். முருகையா பலியான தகவலை, படுகாயம் அடைந்த அசோக்குமார் டெலிபோன் மூலம் முருகையாவின் மனைவி வெள்ளைத்தாயிடம் தெரிவித்தார்.

    ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பலியான முருகையாவின் மனைவி வெள்ளைத்தாய், மகன் கோபால கிருஷ்ணன் (14), மற்றும் லிபியாவில் உள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் தலைவன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    பலியான முருகையாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த அசோக்குமார் உள்ளிட்ட லிபியாவில் சிக்கித் தவிக்கும் மற்ற தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டர் ஜெயராமனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தலைமை செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பலியான முருகையாவின் மகன் மகன் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-

     நாங்கள் குடும்பத்துடன் கேரள மாநிலம் மூணாறு பள்ளநாடு என்ற இடத்தில் தங்கி இருந்து மிளகு, காபி தூள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறோம். எனது தந்தை முருகையா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாநாட்டுக்கு வேலைக்கு சென் றார். கடந்த 17-ந்தேதி என்னுடன் டெலிபோனில் பேசினார்.

    மறுநாள் பேசுவதாகவும் கூறினார். ஆனால் அவர் கூறியபடி டெலிபோனில் பேசவில்லை. அவருடன் என்னால் டெலிபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு அவருடன் தங்கி இருந்த சிலர் டெலிபோன் மூலம், என் தந்தை முருகையா இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது அக்காள் கலையரசிக்கு (19) திருமணம் நடைபெற்றது. அதற்கு கூட அவரால் வரமுடியவில்லை. விரைவில் இங்கு வருவதாக கூறி இருந்தார்.

    அதற்குள் அவர் இறந்து விட்டார். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கண்ணீர் விட்டபடி கூறினார். தலைவன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் கூறியதாவது:-

    எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை வாய்ப்புக்காக லிபியா நாட்டுக்கு சென்று உள்ளனர். அவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அங்கு பரிதவித்த நிலையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இம்மாதம் 28-ந் தேதியுடன் வேலை முடிந்து ஊருக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர். அதற்காக வேலை செய்த தனியார் நிறுவனம் விமான டிக்கெட்டுகளை எடுத்து கொடுத்து இருந்தது.

    அவர்களில் ஜெயகணேஷ் என்பவர் கடந்த 20-ந் தேதி ஊருக்கு திரும்புவதற்கு தயார் நிலையில் இருந்தார். அதற்குள் கலவரம் ஏற்பட்டு அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவை தீக்கிரையாகி விட்டன. அங்குள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்து கழிப்பறையில் உள்ள தண்ணீரை குடித்து உயிர்வாழ்வதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. தற்போது அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    முருகையா இறந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடப்பதாக கூறுகின்றனர். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு அங்கு சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும்.

     இவ்வாறு பூசைப்பாண்டியன் கூறினார்.

    இதற்கிடையில் லிபியாவில் பலியான தமிழர் முருகையா, விபத்தில் இறந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது. முருகையா உள்பட 3 பேர் தொப்ருக் என்ற இடத்தில் இருந்து காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அவர் பலியானதாகவும், மற்ற இருவரும் பலியானதாகவும் திரிபோலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.


    இதையும் படியுங்களேன்..... 
    (இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)


    • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)


    Posted by விழியே பேசு... at 8:32 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.