விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, May 14, 2011

    கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : மறு ஓட்டுப்பதிவு கோரி அ.தி.மு.க.,வினர் போராட்டம்


    சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2855 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இத்தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே பரபரப்பு நிலவியது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் ஸ்டாலின் 145 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். 2வது சுற்றில் 351 ஓட்டுகள், 3வது சுற்றில் 255 ஓட்டுகள், 4வது சுற்றில் 555 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். 5வது சுற்றில் சைதை துரைசாமி 273 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதன் பிறகு, சைதை துரைசாமி முன்னணி பெறத் துவங்கினார். இதன் பிறகு, 6 மற்றும் 7வது சுற்றிலும் துரைசாமியே முன்னிலையில் இருந்தார். 8வது சுற்றில் துரைசாமி 66 ஓட்டுகள் பின் தங்கினார். 9வது சுற்று எண்ணப்பட்ட போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, 10 வது சுற்று தொடர்ந்தது. 15 வது சுற்று வரை ஏதும் பிரச்னை இல்லை. 16வது சுற்றில் ஒரு மிஷன் வேலை செய்யவில்லை. 17 மற்றும் 18 வது சுற்று எண்ணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, 19வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று மிஷின்களையும் எடுத்து வந்து எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது.

    இந்த மூன்று பெட்டிகளில் உள்ள எண் மாறியிருப்பதாகவும், பெட்டி மாற்றப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், 19வது சுற்று எண்ணப்படவில்லை. அப்போது, அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளருக்கும் அடி விழுந்தது. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து, மையத்திலிருந்த இருகட்சியினரையும் அடித்து விரட்டினர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்தனர். வேட்பாளர் சைதை துரைசாமியிடம் பிரச்னை குறித்து கேட்டனர். அப்போது அவர், மூன்று ஓட்டு பெட்டிகள் மாறியுள்ளதாக கூறினார். ஓட்டு எண்ணும் மையத்திற்கு தி.மு.க., வேட்பாளர் ஸ்டாலின் வரவில்லை. தி.மு.க.,வினர் கூட்டமாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் நின்று கூச்சல் குழப்பம் செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீஸ் இணை கமிஷனர் சாரங்கன், துணை கமிஷனர்கள் பன்னீர்செல்வம், லட்சுமி, மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன் பிறகு, பதட்டம் சற்று ஓய்ந்தது.

    ஓட்டு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க.,வினர் கூறும் போது,""மூன்று பெட்டிகளை மாற்றி விட்டனர். சீரியல் எண்கள் மாறியுள்ளன. நாங்கள் கேட்டதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளரை நாங்கள் அடிக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறாததால், இத்தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும்,'' என்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய இப்பிரச்னை 7 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு, 8 மணி வரை போலீசார் இருதரப்பினரிடமும், இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்
    சுற்று தி.மு.க., அ.தி.மு.க.,
    1 3898 3753
    2 3657 3306
    3 3662 3407
    4 3503 2948
    5 3074 3347
    6 3440 4569
    7 3009 3106
    8 3031 2965
    9 3111 3311 (இந்த சுற்று எண்ணும் போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை)
    10 3856 3446
    11 3467 2721
    12 3867 4287
    13 3903 4218
    14 4543 3816
    15 3180 3560
    16 3674 3054 (இந்த ரவுண்ட் எண்ணும் போது ஒரு மிஷின் வேலை செய்யவில்லை)
    17 4004 3856
    18 4139 3687
    19 சுற்று எண்ணிக்கை துவங்கப்பட்ட போது பிரச்னை ஏற்பட்டது. இந்த சுற்றில், ஐந்து பெட்டிகள் எண்ண வேண்டியுள்ளது. முதலில் மூன்று பெட்டிகள் உட்பட, மொத்தம் எட்டு பெட்டிகள் எண்ணப்படாமல் உள்ளன.

    ஸ்டாலின் வெற்றி: தமிழகம் முழுவதிலிருந்தும் அனைவரின் கவனமும் கொளத்தூர் பக்கம் திரும்பியது. இரவு வரை நீடித்த பரபரப்பில் இறுதியாக ஸ்டாலின் 2855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இதை கேட்டு தி.மு.க., வினர் நிம்மதி அடைந்தனர்.


    Posted by விழியே பேசு... at 12:37 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.