திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா அறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டிருப்பதாவது...
- கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அந்தத் திட்டம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பெற நடவடிக்கை:
- இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு.
- தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்:
- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.
- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.
- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
10ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்:
ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜெயக்குமார் கூறுகையில்,
வரும் 6ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து கூட்டம் நடைபெறும். அந்த நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் நிறைவுறும். 10ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்துவார் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா அறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டிருப்பதாவது...
- கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அந்தத் திட்டம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பெற நடவடிக்கை:
- இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு.
- தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்:
- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.
- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.
- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
10ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்:
ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜெயக்குமார் கூறுகையில்,
வரும் 6ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து கூட்டம் நடைபெறும். அந்த நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் நிறைவுறும். 10ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்துவார் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment