விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, February 2, 2012

    சட்டசபையில் அ.தி.மு.க-தே.மு.தி.க. மோதல்: விஜயகாந்த் வெளியேற்றம்


    சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

     பால் விலை, பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அப்போது சபாநாயகர் ஜெயக்குமார், நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விரிவாக பதில் அளித்துள்ளார். நீங்கள் மீண்டும் அதே பிரச்சினைகளை பேசுகிறீர்களே என்றார்.

    அமைச்சர் வி.மூர்த்தி:- எதிர்க்கட்சி என்றால் குறை சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். இன்று தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அம்மா கொண்டு செல்கிறார். நம்பி வந்த கூட்டணி கட்சியினருக்கு வெற்றி கிடைக்கும் வகையில் அவர்களது தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார் புரட்சித் தலைவி. அவருக்கு மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உள்ளது என்பதையும் மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

    அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- சட்டசபைக்குள் வரமுடியாது என்று நினைத்தவர்கள் எல்லாம் அம்மாவின் தயவால் ஜெயித்து வந்து இருக்கிறீர்கள். இதை சொன்னால் தே.மு.தி.க.வினர் கோபப்படுகிறார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் நீங்கள் (தே.மு.தி.க.) கூட்டணி இருந்தீர்களா? இல்லையே. தமிழக அரசியல் வரலாற்றில் தன்னந்தனியாக தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றி கண்டவர் புரட்சித்தலைவி.

    எனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் புரட்சித் தலைவியை நம்பித்தான் வாக்களித்தார்கள் தவிர உங்களை (தே.மு.தி.க.வை) நம்பி அல்ல. இதை தே.மு. தி.க. நண்பர்கள் உணர வேண்டும்.

    சந்திரகுமார்:- பஸ் கட்டண உயர்வு, பால் விலை ஆகியவற்றை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு உயர்த்தி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும்.

    அமைச்சர் செங்கோட்டையன்:- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. அதில் புரட்சித்தலைவி செல்வாக்கை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    அமைச்சர் வி.மூர்த்தி:- கடந்தகால தி.மு.க. ஆட்சியின் தவறான கொள்கை முடிவு காரணமாக ஆவின் நிறுவனம் நாளுக்கு நாள் நலிந்து அதை மூடும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இதை புத்துணர்வு கொடுத்து மீண்டும் செயல்பட வைத்தவர் புரட்சித்தலைவி. அதனால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. எனவே ஆவின் நிறுவனம் அழிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    சந்திரகுமார்:- ஒரு நாளைக்கு 158 லட்சம் லிட்டர் உற்பத்தியாவதில் 20 லட்சம் லிட்டர் பால்தான் ஆவின் கையாள்கிறது. 138 லட்சம் லிட்டர் பால் தனியார் வசம் உள்ளது. தனியார் பயன் அடைய பால் விலை உயர்த்தப்பட்டதா? என்று நான் கேட்கிறேன்.

    அமைச்சர் செங்கோட்டையன்:- பால் நிலவரம் பற்றி முழு விவரம் தெரிந்தால் பேசுங்கள். கடந்த ஆட்சியில் என்னென்ன நிலை எடுக்கப்பட்டது என்பது மாடு வைத்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் விவரம் தெரியும்.

    அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- தனியார் அதிகம் பயன்பெற பால் விலை உயர்த்தப்பட்டதா? என்ற அர்த்தத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் பேசினார். இது கடந்த ஆட்சியில் ஏற்பட்ட குறையாகும். இப்போது வெண்மை புரட்சிக்கு வித்திட்டு இலவச கறவை மாடுகளை வழங்கி வருபவர் புரட்சித்தலைவி.

    சந்திரகுமார்:- நானும் மாடு வைத்துள்ளேன். பால் வியாபாரம் செய்துதான் இங்கு வந்துள்ளேன். மிட்டா மிராசுதார் கிடையாது. இப்போது மின்சார கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு நடக்கிறது. இது சம்பிரதாயத்துக்காகத்தான் நடக்கிறது. சட்டசபை முடிந்ததும் மின் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தே.மு.தி.க. உறுப்பினர் அடிப்படை விவரமே தெரியாமல் பேசுகிறார். மின் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தவில்லை. தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம்தான் கவனிக்கிறது. மின்சார வாரியம் தங்களது அறிக்கையை அதில் தாக்கல் செய்கிறது. இதுகுறித்து மக்களின் கருத்தை அறிய பல இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். இது விதிகளில் உள்ளது. ஏதோ தான்தோன்றித்தனமாக கருத்து கணிப்பு நடத்தவில்லை. இந்த விவரம் கூட தெரியாமல் உறுப்பினர் பேசுகிறார். இது உறுப்பினரின் அறியாமையைத்தான் காட்டுகிறது.

    பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு பற்றியும் குறிப்பிட்டார். அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றதுதான் எங்கள் கட்சி. இங்கே உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று சவால் விடும் வகையில் பேசினார். அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்.

    விலை உயர்வு குறித்து அமைச்சர் விரிவாக கூறியிருக்கிறார். நானும் பால், பஸ் கட்டண உயர்வு குறித்து வருத்தத்துடன் விளக்கி சொன்னேன். தொலைக்காட்சியிலும் நேரில் தோன்றி மக்களுக்கு விளக்கி கூறினேன். இங்கு சவால் விட்டவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன், சங்கரன்கோவில் தொகுதியில் நாங்கள் தனித்து நிற்கிறோம். உங்கள் கட்சியும் (தே.மு.தி.க.) திராணி இருந்தால் தனித்து நில்லுங்கள் பார்ப்போம். நாங்கள் சங்கரன்கோவிலில் மகத்தான வெற்றி பெறுவோம். உங்களால் முடியுமா?

    எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்:- அதாவது கடந்த 2006-க்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் எத்தனை இடங்களில் ஜெயித்தீர்கள், ஒன்றில் கூட ஜெயிக்கவில்லையே. இன்று நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். ஆளுங்கட்சியினர் எப்படி ஜெயிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

    விஜயகாந்த்:- சங்கரன்கோவில் பற்றி சொல்கிறீர்கள். பெண்ணாகரம் இடைத்தேர்தலில் ஏன் தோற்றீர்கள். அப்போது தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ, அதைத்தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.

    ஓ.பன்னீர்செல்வம்:- தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதைத்தான் நீங்களும் செய்யப்போகிறீர்கள் என்று விஜயகாந்த் கூறுகிறார். தி.மு.க.வில் இதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது நாடே அறியும். சென்னையில் 155 வார்டுக்கு நடந்த தேர்தலில் 99 இடங்களில் மறுதேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது நடந்தது தேர்தலை அல்ல என்றும் கோர்ட்டு கூறியது. ஆனால் புரட்சித்தலைவி ஆட்சியில் நியாயமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி இன்று வரலாறு காணாத வெற்றி பெற்று இருக்கிறோம்.

    விஜயகாந்த்:- உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். கடந்த 2006 தேர்தலின்போது மின்னணு எந்திரத்தை குறை சொன்னீர்கள். இப்போது எப்படி ஜெயித்தீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். இதுதான் உண்மை.

    (அப்போது அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்ல முற்பட்டனர். இதற்கு தே.மு. தி.க.வினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று அவர்களைப் பார்த்து குரல் எழுப்பினார்கள். இரு தரப்பினரும் காரசாரமாக பேசிக்கொண்டனர். யார் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாத அளவுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது. விஜயகாந்த் ஆவேசத்துடன் நாக்கை கடித்தவாறு கையை நீட்டி அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பார்த்து ஆவேசத்துடன் ஏதோ கூறினார். பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் ஒழுங்காக பேசு, உட்கார் என்றனர். சபையில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது சபையில் இருந்த மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் இந்த மோதல்களை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர்)

    சபாநாயகர் ஜெயக்குமார்:- சபையில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட பலரும் அநாகரீகமாக கையை உயர்த்தி பேசுகிறீர்கள். இது நாகரீகம் அல்ல. எனவே தே.மு.தி.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.

    (உடனே விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க.வினர் அனைவரையும் சபை காவலர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள்) பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தே.மு.தி.க. வினரின் செயலை கண்டித்து பேசினார்.

    சட்டசபையில் தே.மு.தி.க.வினர் வெளியேற்றப்பட்ட பின் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    இந்த சட்டமன்றத்தில் அநாகரீகத்துடன் எதிர்க்கட்சி தலைவர் நடந்து கொண்டார். சினிமாவில் வசனம் பேசுவது போல் கையை நீட்டி பேசுகிறார். கவுரவமாக நடந்து கொள்ளவில்லை. எனவே அநாகரீகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சபாநாயகர்:- இன்று எதிர்க்கட்சி தலைவரும், அவரது கட்சி உறுப்பினர்களும் அவையில் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் சட்டசபை விதி 226-ன் கீழ் இந்த பிரச்சினை பற்றி உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்புகிறேன். அந்த குழு நடந்த விதம் குறித்து விசாரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Posted by விழியே பேசு... at 8:04 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ▼  February (295)
      • அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்
      • ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை ப...
      • ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...
      • 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் ...
      • இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?
      • புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிர...
      • எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!
      • பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்
      • சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்க...
      • பசுபதி என்னும் நடிகன்!
      • சொந்தக் குரலில் விஜய் பாடல்!
      • விஜய் படத்தில் விகரம்
      • ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்...
      • இலங்கையை ஊதி தள்ளி இந்தியா அதிரடி வெற்றி
      • நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு ரூ.8883 கோடி சொத்துக்கள்
      • பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்
      • காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை
      • ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
      • அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?
      • ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்
      • அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தா...
      • '3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
      • ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகி...
      • கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய த...
      • சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் '...
      • அடுத்த படம் ! : ஷங்கர்
      • நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?
      • பத்மநாபசுவாமி கோவிலின் 'சி' அறை திறப்பு-கேரளாவில் ...
      • நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
      • 84 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
      • வீடுகள் மீது விழும் கற்கள்: 20 நாட்களாக தூக்கத்தை ...
      • ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள...
      • தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 22 மீனவர்கள் சிற...
      • பிரான்சை வீழ்த்தி ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஆக்...
      • ஆசிய கோப்பை கிரிக்கெட்:சேவாக், சச்சினுக்கு ஓய்வு?
      • ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்
      • வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்... விஞ்ஞானி...
      • எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்த...
      • சங்கரன் கோவில் தேர்தல்: 32 அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
      • கேரளாவில் பார்த்திபனுக்கு விருது!
      • மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்
      • அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
      • ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கேவலமாக தோற்ற இந்தியா
      • ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் ...
      • என்கவுண்டரை விசாரிக்க வந்த மனித உரிமை அமைப்பினர்கள...
      • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.
      • எங்களைத் தொட்டால் இஸ்ரேலை அழித்தொழித்து விடுவோம்-ஈ...
      • இலங்கைக்கு நாளை ஜெனீவாவில் 'அடி' கிடைக்குமா?
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றம்- புதிய வேட்ப...
      • பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு
      • நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :...
      • சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் மவ...
      • 'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே ச...
      • ஐ.நா. முன்பு தமிழர்கள் அணிதிரள சீமான், சத்யராஜ் அழ...
      • என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!
      • இறுதிப் போரில் 9,000 பேர் பலி - இது இலங்கை காட்டும...
      • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆஸ...
      • தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்ச...
      • சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் பற்றி திடுக்கிட...
      • ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டின...
      • இந்திய அணிக்கு "3' கேப்டன்கள் *பலிக்குமா புது "பார...
      • உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய புதிய கிரகம் கண்...
      • சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
      • ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்? :ஆர்வமாக கேட்டறிந்த...
      • செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
      • ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !
      • என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிற...
      • 'இந்திய’னை மிஸ் பண்ணிட்டேன்! : ரஜினி கவலை
      • கோச்சடையானிலிருந்து தீபிகா விலகலா...?!
      • பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் ...
      • பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
      • மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !
      • உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழ...
      • தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வ...
      • மெளன குரு
      • சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
      • ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: ம...
      • சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொ...
      • வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ...
      • தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்
      • இதுவரை 75 பேர் பலி- தமிழகத்தில் எப்போது தொடங்கியது...
      • வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி
      • நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!
      • கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!
      • தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இது...
      • மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
      • தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா?
      • வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுகொலை: போலீசார் அதி...
      • 'பெட்ரோமாக்ஸ் லைட்' வைத்தாவது தேர்தல் நடத்துவோம்-ப...
      • ஐஸ்வர்யாராய் மகள் பெயர்
      • வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான...
      • வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்
      • அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு
      • தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது
      • எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?
      • துணை நடிகைகளை வைத்து விபசாரம் : பிரபல நடிகை சோபனா ...
      • வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்
      • தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்...
      • அஜித்துக்கு சவால் விட்ட சேரன்: சிவாஜி படத்தை ரீமேக...
      • பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.