விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, February 27, 2012

    சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் 'THE ARTIST'


    காலத்தை ரீவைண்ட் செய்து கண்முன் நிறுத்தி இருக்கிறது 'தி ஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம்! இனி திரும்பவே முடியாத, கடந்து மறைந்துவிட்ட அன்றைய திரைக் கலைக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அகனாவிக்கியஸ். மௌனப் படத்துக்கான சகல லட்சணங்களையும் கவனமாகக் கையாண்டு அவர் படைத்திருக்கும் ஒரு காதல் காவியம் இது என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறது ஹாலிவுட். ஹாலிவுட் படங்களுக்குக் கெடுபிடி விமர்சனம் அளிக்கும் ஐ.எம்.டி.பி. தளமே 10-க்கு 8.4 மதிப்பெண்கள் அளித்து பாராட்டும் படம்!
    பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் தட்டிச்சென்றிருக்கும் 'தி ஆர்ட்டிஸ்ட்’, இப்போது ஆஸ்கர் விருது பரிந்துரையில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி , சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 ஐந்து விருதுகளை 'THE ARTIST' படம் வென்றுள்ளது.
    1920-களில் மௌனப் படத்தில் நடிக்கும் கதாநாயகனை மையப்படுத்தி கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர்.

    ஜார்ஜ் வாலன்டைன் மௌன யுகத்தின் பிரபல கதாநாயகன். சாகஸ ஹீரோ. அவர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட நெரிசலில்  ஆட்டோகிராஃப் வாங்க வந்த ரசிகை பெப்பி மில்லர் அவரை இடித்துவிடுகிறாள். திடுக்கிடும் நாயகன், பின்னர் சுதாரித்து, ரசிகையின் தோளில் பாந்தமாகக் கைபோட்டு போஸ் கொடுக்கிறார். அவர் அசரும் அந்த நேரத்தில் பெப்பி அவருடைய கன்னத்தில் முத்தமிட, மறுநாள் 'வெரைட்டி’ இதழில் 'யார் அந்தப் பெண்?’ என்ற படத்துடன் பிரசுரமாகிறாள். அந்தப் படமே ஹாலிவுட்டின் கினோகிராஃப் ஸ்டுடியோவில் பெப்பி நுழைவதற்கு துருப்புச்சீட்டாக மாறுகிறது. ஜார்ஜ் அவளுக்குச் சிபாரிசு செய்கிறார். அந்தப் படத்தில் துணை நடிகையாக இடம்பெறுவதுடன், ஜார்ஜுடன் ஒரு காட்சியில் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் ஜார்ஜின் ஒப்பனை அறையில் தயங்கித் தயங்கி நுழைகிறாள் பெப்பி. அங்கு ஜார்ஜ் இல்லை. அங்கிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் மை தீட்டும் பென்சிலால் 'தேங்க் யூ’ என்று எழுதுகிறாள். அவளுக்குப் பரவசமாக இருக்கிறது. அங்கு மாட்டி இருக்கும் ஜார்ஜுடைய கோட்டின் வலது கையில் தன் இடது கையை நுழைத்து அவளையே அவள் அணைத்துக்கொண்டு மெய்மறந்து நிற்கிறாள். காதலிப்பதுதான் எத்தனை உயர்ந்த கலை?

    அந்த நேரத்தில் ஜார்ஜ் அங்கே வர, ''உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன்'' என்கிறாள். ''ஜெயிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வ தையே நீயும் செய்யக் கூடாது. பிரத்யேகமாக ஏதாவது செய்!'' என்று ஆலோசனை சொன்னபடியே அதே மை தீட்டும் பென்சிலால் அவளுடைய உதட்டுக்கு மேலே செயற்கையாக ஒரு மச்சத்தை உருவாக்குகிறார் ஜார்ஜ். அந்தப் புள்ளி அவளுக்கு மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் செயற்கை மச்சமே அவளது நிரந்தர அடையாளமாகிறது. அவளுடைய வாழ்க்கையே மாறுகிறது. துணை நடிகை என்று திரையில் பெயர்களின் நெரிசலில் இடம்பெற்ற அவளுடைய பெயர், மெள்ள மெள்ள முதல் வரிசைக்கு நகர்ந்து முன்னணி நடிகையாகிறாள்.

    இந்த நேரத்தில் கினோகிராஃப் முதலாளி ஜிம்மர் இனி மௌனப் படம் எடுக்கப்போவது இல்லை என்ற முடிவை அறிவிக்கிறார். அதிர்ச்சி அடைகிறார் ஜார்ஜ். 'மௌனப் படம் இல்லைஎன்றால் வேறு என்ன படம் எடுக்க முடியும்?’ என்று கேட்கிறார். சப்தங்கள் கொண்ட சினிமாவைக் கற்பனை செய்ய முடியாமல் தானே சொந்தமாக ஒரு மௌனப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார் ஜார்ஜ். நாயகி... பெப்பி.
    படம் வெளியாகிறது. அதே நாளில் பெப்பி நாயகியாக நடித்த பேசும் படம் சக்கைப்போடு போட, ஜார்ஜ் தயாரித்த படம் காற்றாடுகிறது. அந்த நேரத்தில் தன்னுடைய பிரபலத்துக்குக் காரணம், தான் பேசும் படத்தில் நடிக்க ஆரம்பித்ததுதான் என்ற அர்த்தத்தில் பெப்பி பேசுவதைக் கேட்டு அவள் மீது கோபமாகிறார் ஜார்ஜ். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்குகிறார். கடனாளியாகி, குடிப் பழக்கத்தால் தன் மேல் கோட்டையும் அடகு வைக்கும் நிலைக்குப்போகிறார். அவரும் அவருடைய நாயும் மட்டும் சிறிய வீட்டில் ஒடுங்கிக்கிடக்கிறார்கள்.

    எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட கலைஞனை வாட்டி வதைப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. சினிமா வந்தபோது நாடகக் கலைஞர்களிடமும், வினைல் போர்டு வந்தபோது சைன் போர்டு எழுதுபவர்களிடமும், கம்ப்யூட்டர் அனிமேஷன் வந்தபோது செல் அனிமேஷன் வரைபவர்களிடமும் விசைத்தறி வந்தபோது கைத்தறி நெசவாளர்களிடமும் காலம் மனரீதியாக ஏற்படுத்திய வலியை மௌனத்தின் மூலம் காதல் நாடகமாகச் சொல்லியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்க அம்சம்.

    நாயகி பெப்பியாக நடித்திருக்கும் பெரினிஸ் பெஜொ, அர்ஜென்டினாவில் பிறந்தவர். அவருடைய தந்தை சினிமா தயாரிப்பாளர். ஆனால், உள்நாட்டு யுத்தம் காரணமாக மூன்று வயதிலேயே பிரான்ஸுக்கு வந்துவிட்டவர். அங்குதான் இந்தப் படத்தின் இயக்குநர் மைக்கேல் அகனாவிக்கியஸைக் காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள். இப்போது வயது 35. சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு துறுதுறு! என்னமாக நடிக்கிறார்? ஜார்ஜ் ஏலம்விட்ட அவருடைய பொருட்களை எல்லாம் ரகசியமாக வாங்கி வந்து பாதுகாப்பதில் தொடங்கி, தீ விபத்தில் சிக்கிவிட்டார் என்ற செய்தி அறிந்து பதைக்கும்போது வரை ஒலியின் அவசியம்இல்லா மலேயே நெகிழவைத்துவிடுகிறார்.

    ஜார்ஜ் வாலன்டைனாக நடித்திருப்பவர் ழான் டுஜார்டின். பிரான்ஸ் டி.வி-க்களில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமான இவர், இதன் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகிவிட்டார். படத்தின் மௌனகுருவான ஹீரோ ஜார்ஜ் பேசும் ஒரே ஒரு வசனம் படத்தின் இறுதியில் இடம்பெறுகிறது. நாயகி பெப்பி தன் அன்பாலும் அக்கறையாலும் தற்கொலைக்குத் துணிந்துவிட்ட ஜார்ஜை மீட்டு மீண்டும் நடிக்கவைக்கிறாள். இருவரும் ஆடும் நீண்ட நடனக் காட்சி ஒரே டேக்கில் ஓ.கே. ஆகிறது. இருவருக்கும் மூச்சிரைக்கிறது. ஜார்ஜ் முதல்முறையாகத் தன் மூச்சின் சப்தத்தைத் திரையின் மூலமாகக் கேட்கத் தயாராகிறார். 'கட்’ என்கிறார் டைரக்டர். அதுதான் படத்தில் ஒலிக்கும் முதல் வசனம். காட்சி ஓ.கே. என்றாலும் நடனத்தை மீண்டும் பார்க்கும் ஆவலில் இன்னொருதரம் ஆட முடியுமா என்று இயக்குநர் கேட்கிறார். ''மகிழ்ச்சியாக!'' என்ற முதல் வசனத்தைப் பேசுகிறார் ஜார்ஜ். மாற்றத்தை ஏற்றுக்கொள்வதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது!


    Posted by விழியே பேசு... at 4:30 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    1 comment:

    1. பனித்துளி சங்கர்February 27, 2012 at 5:05 PM

      நீண்ட நாட்களுக்குப்பின் ஆர்வத்தை அதிகப்படுத்திய படம் . மிகவும் ரசிக்கும் வகையில் இந்த படம் பற்றிய உங்களின் குறிப்புகளும் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ▼  February (295)
      • அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்
      • ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை ப...
      • ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...
      • 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் ...
      • இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?
      • புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிர...
      • எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!
      • பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்
      • சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்க...
      • பசுபதி என்னும் நடிகன்!
      • சொந்தக் குரலில் விஜய் பாடல்!
      • விஜய் படத்தில் விகரம்
      • ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்...
      • இலங்கையை ஊதி தள்ளி இந்தியா அதிரடி வெற்றி
      • நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு ரூ.8883 கோடி சொத்துக்கள்
      • பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்
      • காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை
      • ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
      • அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?
      • ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்
      • அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தா...
      • '3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
      • ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகி...
      • கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய த...
      • சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் '...
      • அடுத்த படம் ! : ஷங்கர்
      • நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?
      • பத்மநாபசுவாமி கோவிலின் 'சி' அறை திறப்பு-கேரளாவில் ...
      • நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
      • 84 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
      • வீடுகள் மீது விழும் கற்கள்: 20 நாட்களாக தூக்கத்தை ...
      • ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள...
      • தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 22 மீனவர்கள் சிற...
      • பிரான்சை வீழ்த்தி ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஆக்...
      • ஆசிய கோப்பை கிரிக்கெட்:சேவாக், சச்சினுக்கு ஓய்வு?
      • ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்
      • வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்... விஞ்ஞானி...
      • எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்த...
      • சங்கரன் கோவில் தேர்தல்: 32 அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
      • கேரளாவில் பார்த்திபனுக்கு விருது!
      • மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்
      • அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
      • ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கேவலமாக தோற்ற இந்தியா
      • ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் ...
      • என்கவுண்டரை விசாரிக்க வந்த மனித உரிமை அமைப்பினர்கள...
      • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.
      • எங்களைத் தொட்டால் இஸ்ரேலை அழித்தொழித்து விடுவோம்-ஈ...
      • இலங்கைக்கு நாளை ஜெனீவாவில் 'அடி' கிடைக்குமா?
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றம்- புதிய வேட்ப...
      • பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு
      • நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :...
      • சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் மவ...
      • 'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே ச...
      • ஐ.நா. முன்பு தமிழர்கள் அணிதிரள சீமான், சத்யராஜ் அழ...
      • என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!
      • இறுதிப் போரில் 9,000 பேர் பலி - இது இலங்கை காட்டும...
      • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆஸ...
      • தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்ச...
      • சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் பற்றி திடுக்கிட...
      • ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டின...
      • இந்திய அணிக்கு "3' கேப்டன்கள் *பலிக்குமா புது "பார...
      • உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய புதிய கிரகம் கண்...
      • சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
      • ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்? :ஆர்வமாக கேட்டறிந்த...
      • செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
      • ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !
      • என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிற...
      • 'இந்திய’னை மிஸ் பண்ணிட்டேன்! : ரஜினி கவலை
      • கோச்சடையானிலிருந்து தீபிகா விலகலா...?!
      • பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் ...
      • பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
      • மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !
      • உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழ...
      • தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வ...
      • மெளன குரு
      • சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
      • ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: ம...
      • சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொ...
      • வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ...
      • தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்
      • இதுவரை 75 பேர் பலி- தமிழகத்தில் எப்போது தொடங்கியது...
      • வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி
      • நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!
      • கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!
      • தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இது...
      • மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
      • தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா?
      • வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுகொலை: போலீசார் அதி...
      • 'பெட்ரோமாக்ஸ் லைட்' வைத்தாவது தேர்தல் நடத்துவோம்-ப...
      • ஐஸ்வர்யாராய் மகள் பெயர்
      • வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான...
      • வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்
      • அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு
      • தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது
      • எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?
      • துணை நடிகைகளை வைத்து விபசாரம் : பிரபல நடிகை சோபனா ...
      • வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்
      • தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்...
      • அஜித்துக்கு சவால் விட்ட சேரன்: சிவாஜி படத்தை ரீமேக...
      • பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.