விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, January 22, 2011

    பிரதமரை வைகோ சந்தித்து பேசிய உணர்ச்சிகரமான விவாதம் உங்களுக்காக !





    பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஈழப் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள்  தாக்கப்படுவது குறித்தும் பிரமதருடன், உணர்வுப்பூர்வமான வாதத்தில் ஈடுபட்டார் வைகோ. வைகோவின் கொள்கைப் பிடிப்பை இந்த சந்திப்பின்போது பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

    இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை (22.1.2011) காலை, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

    பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 9.55 மணிக்கே அங்கு வந்த பிரதமர், வருகின்ற வழியில் வாயிலில் நின்று, வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

    ‘நீங்கள் சொன்ன தமிழ்ப்பெண் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட்டார்’ என்று பிரதமர் கூறினார். ‘அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும், நேற்று, நீங்கள் உடனடியாகத் தொலைபேசியில் பேச நேரம் ஒதுக்கியதற்கும், இன்று காலையில்
    நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ என்றார் வைகோ.

    ‘உங்கள் தாயார், குடும்பத்தினர் எல்லோரும் நலமா? உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் நான் உங்கள் தாயாரைப் பார்த்தேனே?’ என்றார் பிரதமர்.

    "அவர்கள் நலமாக இருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண ஆள். நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு கொண்டு இருப்பதற்கு நன்றி" என்றார் வைகோ.

    ‘நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழும் தலைவர்’ என்றார் பிரதமர்.

    பிரதமரை விமர்சிக்கிறேன்- மன்மோகனை நேசிக்கிறேன்

    ‘நான் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரைத்தான் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்', என்றார் வைகோ.

    'உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்’என்றார் பிரதமர்.

    பாரக் ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார்.

    ‘அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெறுவார் என்பதை முதலிலேயே கூறியதுடன், கருப்பர்களின் துயர் மிகுந்த போராட்ட வரலாறையும் இந்த நூலில் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகத்தை, டெல்லி கபூர்தலா இல்லத்தில் வெளியிட பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தாம் ஏற்பாடு செய்தார். உங்கள் அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லாதான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்’ என்றார் வைகோ.

    இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கேடு வரும்...

    இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து விட்டது. இப்போது, செஞ்சீனம்அங்கே வலுவாகக் கால் பதித்து விட்டது.

    எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும். ஆபத்து, தெற்கே இருந்துதான் வரப்போகிறது. அப்போது, இந்த சிங்கள அரசு, இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படப் போகிறது. அப்போதுதான் இந்திய அரசு இதை உணரும். ஈழத்தமிழர்கள் அங்கு வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களோடு இரத்த பந்த உறவு உள்ளதால், இந்தியாவுக்குத்தான் பக்கபலமாக இருப்பார்கள். இப்போது, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை வந்து சுடுவதும், கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது’ என்றார் வைகோ.

    ‘தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்களே?’ என்றார் பிரதமர்.

    ‘குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்தான்  எல்லைக்கு உள்ளே சென்று விடுகிறார்கள்’ என்றார் வைகோ.

    ‘அவர்களையும்தான் கைது செய்கிறார்கள்’ என்றார் பிரதமர்.

    ‘ஆமாம். ஆனால், ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடித்தது உண்டா? தாக்கியது உண்டா? துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா? ஒரு உயிரையாவது பறித்தது உண்டா? கிடையாது.

    ஆனால், 1980 முதல், இதுவரை ஆயிரம் தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 பேர்கள் வரையிலும் கொன்று விட்டனர். 97 ஆம் ஆண்டு, ஆறுகாட்டுத்துறை என்கிற இடத்தில், நம் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் இலங்கு ஊர்தி ஒன்று தாழப் பறந்து வந்து குண்டு வீசியதில், ஆறு மீனவர்கள் துண்டுதுண்டாகச் சிதறிப் போனார்கள்.

    இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இது தொடர்பான புகாரைக் கூட வாங்கவில்லை. நான், பிரதமர் குஜ்ரால் அவர்களை தில்லியில் சந்தித்து, இந்தியக் கடற்படையையும், இந்திய அரசையும் கண்டித்தேன். இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல்படையோ, இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்கவோ, தமிழக மீனவர்களைக் காக்கவோ, ஒருதடவையாவது முயற்சித்தது உண்டா? கிடையாது. எனவே, தமிழக இளைஞர்கள் உள்ளத்தில், நாம் இந்தியாவின் குடிமக்கள்தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியக் கடற்படை, நமது கடற்படையா? என்ற எண்ணமும் எழுகிறது என்றார் வைகோ.

    இலங்கை மறுப்பதாக கூறிய மேனன்!

    அப்போது அங்கே இருந்த சிவசங்கர மேனன், ‘இப்போது கடைசியாக நடந்த துப்பாக்கிச் சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?’ என்றார்.

    ‘என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவதுதான் போடுகிறார்கள். சுடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், அவர்கள் இப்படித் திமிரோடு பொய் சொல்லுகிறார்கள்’ என்றார் வைகோ.

    மேலும், பிரதமர் அவர்களே, ‘நீங்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்’ என்றார்.

    'கடுமையான பிரச்சினைதான்'

    ‘இதை ஒரு கடுமையான பிரச்சினையாகக் கருதி, நாங்கள் இலங்கை அரசோடு பேசுவோம்’ என்றார் பிரதமர்.

    அடுத்து, "தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு ஏற்படும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க, கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது. அது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், லண்டன் பொறியாளர் பென்னி குக் கட்டிய வலுவான அணை. ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தண்ணீர் உரிமை உண்டு. உச்சநீதிமன்றமும் அவ்வாறே தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கேரளத்தின் அச்சுதானந்தன் அரசு, பொய்யான தகவல்களைச் சொல்லி, அணையை உடைக்க முயற்சிக்கிறது.

    இதோ, சிவசங்கர மேனன் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். தமிழகத்தில், மலையாளிகளும் வாழ்கிறார்கள். கேரளத்தில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இன அடிப்படையில், நாங்கள் ஒரே குடும்பம்தான். தமிழ்நாட்டில் இருந்து, அரிசி, பருப்பு, பால், காய்கறி அனைத்தும் தருகிறோம்.

    கேரளத்துக்கு கேடு

    கேரளத்தில் சாகுபடிக்கு ஏற்ற நிலம் இல்லை. உணவு விளைச்சலைப் பெருக்க முடியாது. ஆனால், ஏராளமான நல்ல தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைப் பகிர்ந்து கொண்டால், இரண்டு மாநிலங்களும் வளமாக இருக்கலாம். முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது தமிழகத்துக்கும் கேடு; கேரளத்துக்கும் கேடு. பகையும் ஏற்படும். எனவே, மத்திய அரசு  இதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று, வைகோ தெரிவித்த கருத்துகளைப் பிரதமர் கனிவுடன் கேட்டார்.

    வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வைகோவும், புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், ‘நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?’ என்று கேட்டனர்.

    ‘இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அண்ணா தி.மு.க. அணி வெல்லும். அண்ணா தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை’ என்றார் வைகோ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


    Posted by விழியே பேசு... at 6:04 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ▼  January (439)
      • ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்...
      • திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு...
      • ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்...
      • அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாற...
      • விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த ...
      • கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி
      • 3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை ...
      • 'சீடன் என் படமல்ல!' - தனுஷ்
      • எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளிய...
      • கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று
      • ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பு...
      • வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்
      • சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!
      • த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
      • மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக...
      • ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!
      • ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
      • மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு...
      • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி ...
      • திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்
      • காதலர் தினத்திற்கு 2 படம்
      • மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!
      • செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆப...
      • ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்...
      • காதலர்களுக்காக சிம்பு கண்டிஷன்!
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: என்னாச்சு இந்தப் பெண...
      • `3 இடியட்ஸ்' படத்தில், மீண்டும் விஜய்! :பிப்ரவரி 7...
      • ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது -நாகர்ஜுனா
      • விஜய் NDtv க்கு அளித்த பரப்பரப்பான பேட்டி
      • ஜேசுதாசுக்கு சுவாதி சங்கீத விருது
      • 'சூப்பர்' பட சிறப்புக் காட்சியில் ரஜினி!
      • 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு த...
      • ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...
      • ஷங்கர் படத்திற்கு சூர்யா கேட்ட சம்பளம்
      • இது புதுசா, அல்லது அதேதானா? -குழப்பும் ராணாவும் சு...
      • குழப்பத்தில் விஜயகாந்த் விரக்தியில் விஜயகாந்த் ரசி...
      • நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வ...
      • நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...
      • நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
      • விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: போலீசாரிட...
      • செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்
      • “ராணா” படத்தில் 2 நாயகிகள்: ரஜினி ஜோடியாக அனுஷ்கா,...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :. தனுஷ் செய்த ஜாங்கிரி
      • பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி ...
      • ரஜினியின் அடுத்த படம் ராணா:அனிமேஷன் படம் அல்ல மூன்...
      • தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியல்
      • பொம்பள சிவாஜி.....!!!
      • ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார...
      • நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!
      • மன்மதன் அம்பு சுமாரான படமா? : மாதவனை எச்சரித்த கமல்
      • அழகுக்காக பல்லை சரி செய்தார் விஜய்
      • 'கரன்சி மெஷினாக' மாறிய சச்சின்! :ஒரு நாள் வருவாய் ...
      • விஜய் தந்தை தமிழக அரசுக்கு ஃபைன் கட்டினார்!
      • அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
      • பார்வையற்றோருக்கு உதவுங்கள் -ஸ்ரேயா
      • நயன்தாரா அம்மாவாக நடித்ததில் தவறில்லை -மனிஷா கொய்ராலா
      • த்ரீ இடியட்ஸ் லேட்டஸ்ட் நிலவரம்
      • ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டரை கன்னத்தில் அறைந்த சி...
      • மறைந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு காங்க...
      • பில்லா 2-ல் அஜித் நாயகியாக அனுஷ்கா
      • கலைஞர் மனைவி கோவில் கோவிலாக சென்று சாமிதரிசனம் :ஐய...
      • தமிழர்களின் எதிர்ப்பால் ராஜபக்சே அமெரிக்காவை விட்ட...
      • நயன்தாரா-பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
      • ஹீரோவாகிறார் கண்ணதாசனின் பேரன்: மற்றும் பட போட்டோ...
      • இந்தி, தெலுங்கு படத் தோல்விகள்... தமிழிலாவது வெற்ற...
      • ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!! -வருமான வரித் ...
      • 'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!
      • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் ப...
      • ரஜினியுடன் நடிக்க கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா
      • இலங்கைக்கு கச்சதீவு சீனாவுக்கு அருணாசல பிரதேசமா......
      • காவலன் ஹிட் மற்றதெல்லாம் பிளாப்பே...
      • நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி
      • விஜய் நேற்று ஜெயா டிவி -க்கு அளித்த பரபரப்பு பேட்ட...
      • அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கு...
      • விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
      • மங்காத்தா கதை - இயக்குநரே சொன்னது ...
      • இந்திக்கு போகிறார் சிம்பு ...
      • இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் அபாயம்...
      • தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜ...
      • அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப ச...
      • ரஜினியுடன் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
      • கோடை விடுமுறையில் 'மாப்பிளை' வானம் எப்போது வரும்?
      • தொழில் அதிபர் மகனுடன் காதல்: தீபிகா படுகோனேக்கு ரூ...
      • அரசியலுக்கு வந்தால் ஊழலை எதிர்ப்பேன்; விஜய் பரபரப்...
      • பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்...
      • தெரியுமா சங்கதி...? விஜயின் அடுத்த படத்திக்கும் ப...
      • நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா
      • மகனை ஒப்படைக்க கோரி வனிதா சாலை மறியலால் :போலீஸ் தா...
      • சுனேனா அழக்காரணம் என்ன?
      • சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்பு செல்லும்: ச...
      • மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு:விருது பெறு...
      • ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
      • மாணவி அருஷி கொலை வழக்கு: கோர்ட்டுக்கு வந்த தந்தை ம...
      • த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது
      • சம்பளத்தை ஏற்றினார் தனுஷ்
      • "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" -விஜய் ப...
      • உதயநிதி ஸ்டாலினை வைத்து கொண்டே...
      • ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க! சொல்கிறார் ஸ்ரேயா!!
      • தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்
      • புத்த மடத் தாக்குதல் குறித்து சீமான் கருத்து
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.