விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, January 23, 2011

    சிங்கள கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் கொடூர கொலை; கடலில் தள்ளி கழுத்தை கயிற்றால் இறுக்கினர்



    கடலுக்கு   மீன்பிடிக்க செல்லும்   தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்    பாண்டி சமீபத்தில்   சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த   சம்பவத்துக்கு  தமிழக    முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    தமிழக மீனவர்களுக்கு   பாதுகாப்பு அளிக்ககோரி  பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்,  கடிதம் எழுதினார். டெல்லியில்  உள்ள இலங்கை தூதரை அழைத்து    மத்திய அரசு    கண்டனத்தை தெரிவித்தது. இலங்கை தூதரும் இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்று உறுதி அளித்தார். இந்தநிலையில் சிங்கள கடற்படை கொடூர தாக்குதலுக்கு வேதாரண்யம் மீனவர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

    வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான விசைபடகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன் (வயது 45), ஜெயக்குமார் (28), அவரது தம்பி செந்தில் (26) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று  காலையில் கடலுக்கு சென்ற இந்த மீனவர்கள் 3 பேரும் கோடியக்கரை பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில் இவர்கள் படகை நோக்கி சிங்கள கடற்படையினரின் படகு ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.

    நேராக வந்த அந்த படகு தமிழக மீனவர்கள் படகு மீது மோதி நின்றது. அந்த படகில் 10-க்கும் மேற்பட்ட சிங்கள கடற்படையினர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.அவர்கள் தமிழக மீனவர்களை மிரட்டினர். பிறகு 3 தமிழக மீனவர்களையும் கடலில் குதிக்கும்படி கூறினார்கள். உயிருக்கு பயந்து ராஜேந்திரனும், செந்திலும் கடலில் குதித்து விட்டனர். ஜெயக்குமார் கை ஊனமுற்றவர். சரியாக நீச்சலும் தெரியாது. ஜெயக்குமார் கடலில் குதிக்காமல் தனது படகிலேயே பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    உடனே ஒரு சிங்கள கடற்படை வீரர் தமிழக மீனவர் படகில் ஏறினார். அந்த படகில் இருந்த கயிற்றை எடுத்து ஜெயக்குமார் கழுத்தை இறுக்கினார். பிறகு ஜெயக்குமாரை கடலில் தள்ளினார். கடலில் தத்தளித்த அவரை கயிற்றை பிடித்து இழுத்து இறுக்கி துடிதுடிக்க கொடூரமாக கொன்றார். இந்த செயலையை  பார்த்த மற்ற 2 மீனவர்களும்  உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.

    இந்த கொடூர செயலை அரங்கேற்றிவிட்டு சிங்கள கடற்படை படகு அங்கிருந்து விரைந்து சென்று மறைந்தது. உடனே ராஜேந்திரனும், செந்திலும் சுதாரித்துக் கொண்டு ஜெயக்குமார் உடலை தூக்கி தங்கள் படகில் போட்டனர். தனது கண்முன்பே அண்ணன் ஜெயக்குமார் கொல்லப்பட்டதை நினைத்து செந்தில் கதறினார்.

    பிறகு அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் படகு புஷ்பவனத்தில் கரை  சேர்ந்தது. இதற்கிடையில் புஷ்பவனம் கிராமத்தில் இந்த தகவல் பரவி விட்டதால் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு நின்றனர். ஜெயக்குமாரின் பிணத்தை பார்த்து அவரது மனைவி முருகேஸ்வரி கதறி அழுதார். மற்ற மீனவர்கள் சிங்கள கடற்படையினரை கண்டித்து கோஷம் போட்டனர்.

    இதனால் கடற்கரையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், கிï பிராஞ்ச் போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளும் அங்கு விரைந்து உள்ளனர். உயிர் தப்பிய மீனவர்கள் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புஷ்பவனம் மீனவர்கள் 300 பேர் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினார்கள். மீனவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    தமிழக மீனவன் உயிர் என்ன வெங்காயத்தை விட மலிவா போச்சா ..? எனது இப்போதைய கவலையும் கண்டனமும் இந்திய அரசை பற்றி அல்ல. எனது கவலை , கண்டனம் அனைத்தும் தமிழக மீனவர்களிடம் தான். எனக்கு தெரிந்த வரை உலகில் உள்ள இனங்களில் மீனவன் தான் தைரியத்திலும், பலத்திலும் சிறந்தவன் . எதற்கும் அஞ்சாதவன். நீ இழந்த உயிர்கள் எத்தனை எத்தனை ...இன்னும் இழக்க வேண்டுமா உயிர்களை ...? திரைப்படத்தில் (ஆடுகளம் ) வரும் ஒரு சின்ன வசனத்திற்கே ரோசத்தோடு பொங்கி எழும் நீங்கள் உங்கள் சிங்கள ராணுவத்தால் எடுக்கபடும் போது பொங்கி எழாதது ஏன்?. உங்கள் மீனவ அமைப்புகளை ஒன்று கூட்டுங்கள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மீனவர்களும் அவர்களது படகில் புறப்படுங்கள் இலங்கை நோக்கி யார் தடுத்தாலும் நிக்காமல் புறப்படுங்கள் அப்போது வரும் இந்திய அரசு உங்களுடன் பேச அப்போது கேளுங்கள் "இன்னும் ஒரு தமிழக மீனவன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டால் இலங்கை மீது போர் தொடுபீர்களா ? அல்லது எங்களை இலங்கை செல்ல அனுமதியுங்கள்." என்று தைரியமாக கேளுங்கள். இதுவும் முடிய வில்லையா உங்களுக்கு வேறு ஒரு நல்ல உடனடி பலனளிக்கும் ஆலோசனை சொல்கிறேன். பக்கத்தில் வாருங்கள் காதை கொடுங்கள் இது மிகவும் ரகசியமானது. (யாருக்கும் தெரிய வேண்டாம் நம்ம உள்ளாடியே இருக்கட்டும்) .'பேசாமல் நீங்கள் மீன் பிடிக்க செல்லும் பொது உங்களுடன் ஒரு மலையாளியை (கேரளா காரனை ) அழைத்து செல்லுங்கள் அவனை சிங்கள ராணுவம் போட்டு தள்ளட்டும்.  அதன் பிறகு பாருங்கள் இந்திய அரசு ஊடுர ஓட்டத்தை. (அட ரோசம் கேட்ட தமிழனே அப்போது தான் உன் நிலைமையும் உனக்கு புரியும்). போங்கடா அரசியல்வாதிகளே .... நீங்களும் உங்கள் தமிழ் பற்றும்...
    இன்னும் ஒன்று சொல்லணும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரை இதை போன்று சிங்கள ராணுவம் சுட்டு கொன்ற போது தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை நினைவு படுத்தி பாருங்கள். தமிழக அரசின் பலத்த கண்டனம், ஒரு நாள் பள்ளி கல்லூரிகள் அடைப்பு , தொடர் போராட்டங்கள் இப்படி தமிழகமே சும்மா அதிர்ந்தது. ஏன் ? எப்படி சாத்தியமாயிற்று அது மட்டும். யோசியுங்கள் ...அதன் பின்னணியில் இருந்தது கிறிஸ்தவ அமைப்புகள். அவர்களை பாரட்ட வேண்டும். நான் நினைக்கிறேன் ராமேச்வரத்தில் இறக்கும் மீனவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று அதனால் தான் இப்படி நடக்கிறது என்று. இந்து, இந்து என்றும் ராமர்கோவில் என்று வெத்து வெட்டு தனமாக பேசிக்கொண்டு இருக்கும் இந்து அமைப்புகள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள் வாயில் கையை வைத்து கொண்டா இருக்கிறார்கள்? ...? 
    குறிப்பு: நான் இந்து வெறியன் என்று நினைக்க வேண்டாம். ..உண்மையில் நான் இந்து மதத்தை சார்ந்தவன் அல்ல . ஆனால் அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் மதிப்பவன். என்னுடைய ஆதங்கம் எல்லாம் ஒரு கிறிஸ்தவ மீனவன் மீது கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இருக்கும் அக்கரையில் பாதி அளவுக்கூட இந்து மீனவன் மீது இந்து அமைப்புகளுக்கு இல்லை என்றால் எதுக்குடா அமைப்புன்னு ஒன்னு வச்சுக்கிட்டு திரியுறீங்க பேசாமல் போர்த்திகிட்டு தூங்குங்கடா....


    Posted by விழியே பேசு... at 2:08 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ▼  January (439)
      • ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்...
      • திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு...
      • ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்...
      • அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாற...
      • விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த ...
      • கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி
      • 3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை ...
      • 'சீடன் என் படமல்ல!' - தனுஷ்
      • எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளிய...
      • கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று
      • ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பு...
      • வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்
      • சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!
      • த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
      • மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக...
      • ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!
      • ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
      • மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு...
      • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி ...
      • திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்
      • காதலர் தினத்திற்கு 2 படம்
      • மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!
      • செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆப...
      • ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்...
      • காதலர்களுக்காக சிம்பு கண்டிஷன்!
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: என்னாச்சு இந்தப் பெண...
      • `3 இடியட்ஸ்' படத்தில், மீண்டும் விஜய்! :பிப்ரவரி 7...
      • ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது -நாகர்ஜுனா
      • விஜய் NDtv க்கு அளித்த பரப்பரப்பான பேட்டி
      • ஜேசுதாசுக்கு சுவாதி சங்கீத விருது
      • 'சூப்பர்' பட சிறப்புக் காட்சியில் ரஜினி!
      • 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு த...
      • ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...
      • ஷங்கர் படத்திற்கு சூர்யா கேட்ட சம்பளம்
      • இது புதுசா, அல்லது அதேதானா? -குழப்பும் ராணாவும் சு...
      • குழப்பத்தில் விஜயகாந்த் விரக்தியில் விஜயகாந்த் ரசி...
      • நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வ...
      • நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...
      • நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
      • விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: போலீசாரிட...
      • செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்
      • “ராணா” படத்தில் 2 நாயகிகள்: ரஜினி ஜோடியாக அனுஷ்கா,...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :. தனுஷ் செய்த ஜாங்கிரி
      • பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி ...
      • ரஜினியின் அடுத்த படம் ராணா:அனிமேஷன் படம் அல்ல மூன்...
      • தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியல்
      • பொம்பள சிவாஜி.....!!!
      • ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார...
      • நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!
      • மன்மதன் அம்பு சுமாரான படமா? : மாதவனை எச்சரித்த கமல்
      • அழகுக்காக பல்லை சரி செய்தார் விஜய்
      • 'கரன்சி மெஷினாக' மாறிய சச்சின்! :ஒரு நாள் வருவாய் ...
      • விஜய் தந்தை தமிழக அரசுக்கு ஃபைன் கட்டினார்!
      • அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
      • பார்வையற்றோருக்கு உதவுங்கள் -ஸ்ரேயா
      • நயன்தாரா அம்மாவாக நடித்ததில் தவறில்லை -மனிஷா கொய்ராலா
      • த்ரீ இடியட்ஸ் லேட்டஸ்ட் நிலவரம்
      • ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டரை கன்னத்தில் அறைந்த சி...
      • மறைந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு காங்க...
      • பில்லா 2-ல் அஜித் நாயகியாக அனுஷ்கா
      • கலைஞர் மனைவி கோவில் கோவிலாக சென்று சாமிதரிசனம் :ஐய...
      • தமிழர்களின் எதிர்ப்பால் ராஜபக்சே அமெரிக்காவை விட்ட...
      • நயன்தாரா-பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
      • ஹீரோவாகிறார் கண்ணதாசனின் பேரன்: மற்றும் பட போட்டோ...
      • இந்தி, தெலுங்கு படத் தோல்விகள்... தமிழிலாவது வெற்ற...
      • ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!! -வருமான வரித் ...
      • 'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!
      • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் ப...
      • ரஜினியுடன் நடிக்க கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா
      • இலங்கைக்கு கச்சதீவு சீனாவுக்கு அருணாசல பிரதேசமா......
      • காவலன் ஹிட் மற்றதெல்லாம் பிளாப்பே...
      • நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி
      • விஜய் நேற்று ஜெயா டிவி -க்கு அளித்த பரபரப்பு பேட்ட...
      • அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கு...
      • விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
      • மங்காத்தா கதை - இயக்குநரே சொன்னது ...
      • இந்திக்கு போகிறார் சிம்பு ...
      • இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் அபாயம்...
      • தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜ...
      • அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப ச...
      • ரஜினியுடன் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
      • கோடை விடுமுறையில் 'மாப்பிளை' வானம் எப்போது வரும்?
      • தொழில் அதிபர் மகனுடன் காதல்: தீபிகா படுகோனேக்கு ரூ...
      • அரசியலுக்கு வந்தால் ஊழலை எதிர்ப்பேன்; விஜய் பரபரப்...
      • பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்...
      • தெரியுமா சங்கதி...? விஜயின் அடுத்த படத்திக்கும் ப...
      • நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா
      • மகனை ஒப்படைக்க கோரி வனிதா சாலை மறியலால் :போலீஸ் தா...
      • சுனேனா அழக்காரணம் என்ன?
      • சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்பு செல்லும்: ச...
      • மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு:விருது பெறு...
      • ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
      • மாணவி அருஷி கொலை வழக்கு: கோர்ட்டுக்கு வந்த தந்தை ம...
      • த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது
      • சம்பளத்தை ஏற்றினார் தனுஷ்
      • "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" -விஜய் ப...
      • உதயநிதி ஸ்டாலினை வைத்து கொண்டே...
      • ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க! சொல்கிறார் ஸ்ரேயா!!
      • தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்
      • புத்த மடத் தாக்குதல் குறித்து சீமான் கருத்து
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.