இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கலைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார்.
மூவர் குழுவின் அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் ஐ.நா.பொதுச்செயலரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றுபெற்றுவிட்டதால் ஐ.நா.பொதுச்செயலர் மூவர் குழுவினை கலைத்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்கள் அளித்தவர் பற்றிய விவரங்களை இருபது வருடங்களுக்கு வெளியிடக்கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

No comments:
Post a Comment