விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, June 26, 2012

    ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சாட்சிகள் விசாரணை ரத்து!


    சென்னையில் பட்டப் பகலில் வகுப்பறையில் ஆசிரியர் உமா மகேஸ்வரி கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட் நடத்திய சாட்சிகள் விசாரணை செல்லாது என்று அறிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை பாரிமுனைப் பகுதியில் உள்ள செயின்மேரீஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி இவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியை உமாவை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்து விட்டான்.
    நாட்டையே பெரும் பதைபதைப்பில் ஆழ்த்திய இந்த கொலை வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சி விசாரணையை முழுவதுமாக ரத்து செய்தும், செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    முன்னதாக சாட்சிகள் விசாரணையை ரத்து செய்யுமாறு கோரி மாணவர் சார்பில் அவரது வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை கோடை விடுமுறைகால நீதிபதி நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து சாட்சிவிசாரணைக்கு தடை வித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முறையான நீதிபதி நாகமுத்து முன்னிலையில் வந்தது. அப்போது அவர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
    அதன் முழு விவரம்:
    வழக்கின் இறுதி அறிக்கையை போலீசார் கடந்த 17.5.12 அன்று தாக்கல் செய்தனர். அன்று சிறுவர் நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட் (12-வது கோர்ட் மாஜிஸ்திரேட்) விடுமுறை என்பதால், 12-வது கோர்ட்டின் பொறுப்பில் 20-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டார். அவர் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாணவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.
    மே மாதம் 29, 30, 31-ந் தேதிகளில் 27 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மாணவன் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு தடையாணை பெற்றார்.
    வழக்கின் ஆவணங்களை பார்க்கும்போது, சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் நியமனமே தவறானது என்பது தெரிய வருகிறது. சிறுவர்கள் நீதி வாரியத்தின் சட்டப்படி, குழந்தைகள் மனோதத்துவம் தெரியாத அல்லது அதில் பயிற்சி பெறாதவர்கள் அந்த நீதிமன்றத்தின் முதன்மை மாஜிஸ்திரேட்களாக நியமிக்கப்படக் கூடாது.
    12-வது கோர்ட்டின் பொறுப்புப் பணிக்கு வரும் மாஜிஸ்திரேட் எப்படி தலைமை மாஜிஸ்திரேட் பணியை செய்ய முடியும். தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்படாத அவர் தலைமை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வழக்கின் சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.
    எனவே 17.5.12 அன்றிலிருந்து 31.5.12 வரை தலைமை மாஜிஸ்திரேட் பதவியில் இருந்து கொண்டு 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை அனைத்தும் செல்லாது. கடுமையான கொலை குற்றச்சாட்டு வழக்கில் சாட்சி விசாரணையை நடத்திவிட்டு, அது வெறும் சாதாரண விசாரணைதான் என்று மாஜிஸ்திரேட் கூறுவதை ஏற்க முடியாது.
    குறுக்கு விசாரணை நடத்துவதற்கு கால அவகாசம் தரப்படவில்லை என்பதால் குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் போய்விட்டது என்று மாணவன் தரப்பு வக்கீல் கூறுவதில் நியாயம் உள்ளது. 48 சாட்சிகள், 95 ஆவணங்களைக் கொண்ட இந்த வழக்கில், சிறுவனின் நலனை கருதாமல் அவசர அவசரமாக விசாரணை நடத்தியது தெரிகிறது.
    சிறுவர்களை விசாரிப்பதற்காக புரசைவாக்கத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயம் ஏற்படாதபடி, நட்பின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே கோர்ட்டு அல்லாத தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்களை விசாரிக்கும் 20-வது கோர்ட்டுக்கு கொண்டு வந்து, அங்கு சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.
    மேலும் சிறுவர்களை கையாளும் தனி போலீஸ் பிரிவை வைத்துத்தான் அந்த வழக்குகளை நடத்தி இருக்க வேண்டும். மாணவன் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எத்தனையோ விஷயங்களை கூற முடியும் என்றாலும், மனுதாரரின் மனுவைத் தாண்டி வெளியே செல்ல விரும்பவில்லை.
    ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுவர் நீதிமன்றங்களில் சிறப்பு அரசு வக்கீல்களை அரசு நியமிக்க வேண்டும். அந்தப் பதவியில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருப்பதோடு, குழந்தைகள் நலன் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
    எனவே மாணவன் வழக்கில் 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சிறுவர் நீதிமன்றத்துக்கு தகுதியான தலைமை மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும். இங்கு தகுதியான உறுப்பினர்களை நியமித்து பிறகு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
    இதனால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் புதிய நீதிபதி வந்து அதன் பிறகே சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்பதால் இந்த வழக்கு மேலும் தாமதமடையும் என்று தெரிகிறது.
    தற்போது இந்த சாட்சிகள் விசாரணையை நடத்தியவர் 20வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted by விழியே பேசு... at 12:24 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ▼  June (409)
      • வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா...
      • சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்
      • விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!( 4.14 Minutes )
      • தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்...
      • சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னி...
      • என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் ...
      • கொல்கத்தா மருத்துவ கல்லூரில் குண்டு வெடிப்பு- இருவ...
      • வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக...
      • லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக...
      • பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள்!! - மமதா அதிரடி
      • நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும்...
      • சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?
      • இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கி...
      • மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செ...
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் ச...
      • சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்
      • மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை...
      • மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ப...
      • நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை
      • ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்
      • 'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...
      • ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டிய...
      • கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டி...
      • நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்க...
      • ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படி...
      • செப்.5-க்குள் அரசியலிலிருந்து விலக வேண்டும்: சர்தா...
      • தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- 6 pack-கிற்கு ஆயத்த...
      • பெருந்துறை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ பிடித...
      • பாகிஸ்தானின் பல பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங்...
      • யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிப...
      • விஜயின் 'துப்பாக்கி' படத்தலைப்புக்கு நீதிமன்றம் தடை
      • இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: முதல்வராகிறார்...
      • கவர்ச்சி பதுமையாக என்னை பயன்படுத்துவதா?: இந்திய டெ...
      • ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த...
      • ராதாவின் இளைய மகளுக்கு மணிரத்னம் நடிப்பு பயிற்சி
      • சிறை நிரப்பும் போராட்டம்: எனக்கு பிரஷர், சுகர்- ஓட...
      • பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிற...
      • பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூ...
      • டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்தி...
      • பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவ...
      • பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத...
      • இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை
      • உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெய...
      • குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய...
      • நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்...
      • நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை
      • பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சி...
      • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ...
      • ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும...
      • பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கி...
      • தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் ...
      • விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி
      • சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா
      • இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...
      • நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்
      • கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி
      • நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்...
      • சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?
      • சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANC...
      • பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர...
      • ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம...
      • மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது
      • ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் ...
      • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேல...
      • யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தால...
      • சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்திய...
      • நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான...
      • கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
      • நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன...
      • விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
      • மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலக...
      • சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப...
      • நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
      • 'சகுனி' climax வீடியோ
      • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு
      • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 ...
      • இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது த...
      • பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
      • சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் ...
      • தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்...
      • திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்...
      • நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்ப...
      • இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்...
      • ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்
      • கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்...
      • அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும...
      • நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா
      • அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு...
      • யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை...
      • கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச...
      • ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ...
      • திருநங்கையாக ஜெயம் ரவி!
      • தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!
      • துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171...
      • பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
      • தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்த...
      • ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா
      • ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.