விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, June 26, 2012

    பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.!


    முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம்.
    சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சியாகி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தவிர இவர்களை விட வேறு யாருமே தேவையில்லை என்ற அவல நிலை. வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் கூப்பிட்டு வைத்து அத்தனை பேரையும் திட்டித்தீர்த்து விட்டாராம் ஜெயலலிதா.
    ஒவ்வொரு கவுன்சிலரும் செய்த தவறுகளை பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து ரெய்டு விட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனராம்.
    திமுக கட்டிய கட்டடத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு சாத்துப்படி
    கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிட்டி தியாகராயர் அரங்கத்தில்தான் இந்த ரெய்டு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். செல்போன், ஜெயா டிவி ரிப்போர்டர்கள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
    சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்குக் கூட உள்ளே வர அனுமதியில்லை. நேரம் காலம் தெரியாமல், வழக்கம் போல ஜெயலலிதாவை வரவேற்று ஏகப்பட்ட பேனர்களைக் கட்டி வைத்து விட்டனர். ஜெயலலிதா வந்தபோது இவற்றைப் பார்த்து டென்ஷனாகி விட்டார். எது எதற்கெல்லாம் பேனர் வைப்பது என்ற விவஸ்தையே இல்லையா என்று திட்டித் தீர்த்த ஜெயலலிதா, திட்டுவதற்காக வந்துள்ளேன். இதைப் போய் வரவேற்கிறீர்களே என்று கோபத்துடன் கூறியபடி உள்ளே வந்தார்.
    ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர். பின்னர் பேசத் தொடங்கிய ஜெயலலிதாவின் பேச்சில் சூடு பறந்ததாம்.
    முந்தைய திமுக ஆட்சியின்போது மாநகராட்சியில் கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு பிடி பிடிக்க பாதி கவுன்சிலர்களுக்கு வயிற்றைக் கலக்கி விட்டதாம்.
    வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாதுனு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார்.
    பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க
    அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்னு டிமாண்ட் பண்றீங்க. வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டியிருக்கிற வீடுகளுக்கே போய் அடாவடி வசூல் பண்றீங்க. கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க. டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க. ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது என்று வாங்கியுள்ளார்.
    64வது வார்டு கவுன்சிலர் சுந்தர் பெயரைக் கூறி எழுந்திருக்கச் சொன்ன ஜெயலலிதா, குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடுனு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க...என்று கடுமையாக டோஸ் விட ஆடிப் போய் விட்டாராம் சுந்தர்.
    அதேபோல 63வது வார்டு கவுன்சிலர் அலிகான் பஷீர் என்பவரை நிற்கச் சொன்ன ஜெயலலிதா, மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க.. என்று புகார் பட்டியலைப் படிக்க அவர் அமைதியாக நின்றாராம்.
    இவர் சசிகலாவுக்கு நெருக்கமானவராம். சசிகலாவுக்கு அடிக்கடி புதுப் படங்களின் டிவிடிகளைக் கொடுத்து நட்பைப் பெற்று இதன் மூலம் கவுன்சிலர் சீட்டை வாங்கியுள்ளாராம். மேலும், சென்னையில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியை இழந்ததற்கு, இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெ. அன்பழகனுடன் ரகசியமாக கூட்டுவைத்து அலிகான் பஷீர் செயல்பட்டதாக உளவுத்துறை அம்மாவிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
    இதை விட பெரிய அசிங்கம் இருக்கா...
    ஜெயலலிதா அடுத்து ரெய்டு கொடுத்த கவுன்சிலர்தான் இங்கு குறிப்பிடத்தக்கவர். அவரது பெயர் ராஜலட்சுமி. 173வது வார்டு கவுன்சிலர். அவரது பெயரைச் சொல்லி ஜெயலலிதா கூறியபோது, இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது என்று கடும் உஷ்ணப் பார்வை பார்த்தபடி ராஜலட்சுமியை கடுமையாக சாடினார். இதைக் கேட்டு ராஜலட்சுமி ஆடிப் போய் அமைதியாக நின்றார்.
    கவுன்சிலர்களிலேயே அதிக அளவிலான புகார்கள் 114வது வார்டு கவுன்சிலர் முகம்மது அலி ஜின்னா மீதுதான் வாசிக்கப்பட்டதாம். சகல மோசடிகள், முறைகேடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இவர் வேறுயாருமல்ல, 2009 லோக்சபா தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமைச்சர் மகனும் தப்பவில்லை
    இதேபோல மாதவரம் 27வது வார்டு உறுப்பினர் கண்ணதாசன் மீதும் புகார் வாசித்தார் ஜெயலலிதா. இவர் அமைச்சர் மூர்த்தியின் மகன் ஆவார்.
    கவுன்சிலர் போல ஆக்ட் கொடுத்த குப்பம்மா
    ஜெயலலிதா அடுத்த பிடித்த நபர்தான் சுவாரஸ்யமானவர். 93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க, அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.
    ஓவர் ஆக்ட் பண்ணாதே...
    அடுத்து 38வது வார்டு சந்தானத்தைப் பிடித்து கடுமையாக திட்டியுள்ளார் ஜெயலலிதா. அதைக்கேட்டு பயந்து போன சந்தானம்,தனது இரு கைகளால் கன்னத்தில் புத்தி போட்டுக் கொண்டு, புத்தி வந்துருச்சும்மா என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, கோபமாகிப் போன ஜெயலலிதா, ஓவர் ஆக்டிங் கொடுக்காதே என்று அதட்டலாக கூறினார்.
    தொடர்ந்து ஜெயலலிதா மொத்தமாக அத்தனை பேரையும் எச்சரிக்கும் வகையில் பேசியபோது,
    பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
    எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்​திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன்.
    சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன் என்று தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாராம் ஜெயலலிதா.
    ஜெயலலிதாவின் அன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 169 கவுன்சிலர்களில் 100க்கும் மேற்பட்டோர் டோஸ் வாங்கினராம்.
    'அம்மா'விடம் திட்டு வாங்கி விட்டுச் சென்ற அத்தனை கவுன்சிலர்களும் உளவுத்துறை போலீஸார் மீது கடும் காட்டத்துடன் இருக்கிறார்களாம். அதேசமயம், இவர்கள் அத்தனை பேரும் உடனடியாக திருந்தும் திட்டத்திலும் இல்லையாம். மாறாக, வழக்கம் போல நடை போடப் போவதாக பலரும் சவால் போல கூறி வருகிறார்களாம். நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம், எங்களிடம் பங்கு வாங்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களையும் நாங்கள் பட்டியல் போட்டுத் தரத் தயார். அவர்களையும் கூப்பிட்டு அம்மா ரெய்டு விடட்டும் என்று கோபத்துடன் கூறுகிறார்கள்.
    எப்படியோ, விரைவிலேயே மாநகராட்சி அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


    Posted by விழியே பேசு... at 7:36 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ▼  June (409)
      • வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா...
      • சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்
      • விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!( 4.14 Minutes )
      • தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்...
      • சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னி...
      • என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் ...
      • கொல்கத்தா மருத்துவ கல்லூரில் குண்டு வெடிப்பு- இருவ...
      • வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக...
      • லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக...
      • பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள்!! - மமதா அதிரடி
      • நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும்...
      • சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?
      • இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கி...
      • மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செ...
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் ச...
      • சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்
      • மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை...
      • மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ப...
      • நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை
      • ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்
      • 'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...
      • ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டிய...
      • கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டி...
      • நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்க...
      • ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படி...
      • செப்.5-க்குள் அரசியலிலிருந்து விலக வேண்டும்: சர்தா...
      • தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- 6 pack-கிற்கு ஆயத்த...
      • பெருந்துறை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ பிடித...
      • பாகிஸ்தானின் பல பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங்...
      • யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிப...
      • விஜயின் 'துப்பாக்கி' படத்தலைப்புக்கு நீதிமன்றம் தடை
      • இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: முதல்வராகிறார்...
      • கவர்ச்சி பதுமையாக என்னை பயன்படுத்துவதா?: இந்திய டெ...
      • ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த...
      • ராதாவின் இளைய மகளுக்கு மணிரத்னம் நடிப்பு பயிற்சி
      • சிறை நிரப்பும் போராட்டம்: எனக்கு பிரஷர், சுகர்- ஓட...
      • பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிற...
      • பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூ...
      • டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்தி...
      • பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவ...
      • பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத...
      • இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை
      • உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெய...
      • குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய...
      • நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்...
      • நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை
      • பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சி...
      • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ...
      • ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும...
      • பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கி...
      • தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் ...
      • விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி
      • சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா
      • இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...
      • நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்
      • கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி
      • நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்...
      • சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?
      • சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANC...
      • பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர...
      • ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம...
      • மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது
      • ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் ...
      • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேல...
      • யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தால...
      • சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்திய...
      • நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான...
      • கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
      • நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன...
      • விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
      • மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலக...
      • சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப...
      • நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
      • 'சகுனி' climax வீடியோ
      • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு
      • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 ...
      • இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது த...
      • பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
      • சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் ...
      • தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்...
      • திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்...
      • நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்ப...
      • இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்...
      • ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்
      • கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்...
      • அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும...
      • நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா
      • அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு...
      • யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை...
      • கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச...
      • ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ...
      • திருநங்கையாக ஜெயம் ரவி!
      • தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!
      • துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171...
      • பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
      • தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்த...
      • ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா
      • ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.