விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, June 28, 2012

    'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...


    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் தேர்வு செய்திருப்பார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் தொலைக்காட்சி செய்தி ஆய்வாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சீனியர் அசோசியேட் எடிட்டருமான சேகர் ஐயர்.

    இதுகுறித்து அவர் ஒரு இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் வருமாறு...

    குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. குறிப்பாக சோனியா காந்திக்கோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ அவர் அரசியல் சட்ட ரீதியாக எந்தவிதப் பிரச்சினையையும் கொடுக்கவில்லை.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்னவோ உண்மைதான். அதேபோல அவரது புனே வீடும் கூட சர்ச்சையில் சிக்கியது உண்மைதான். இருப்பினும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை.

    எனவே சோனியா காந்திக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முழு சுதந்திரமும் இருந்திருந்தால் நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் சேகர் ஐயர்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டது உண்மைதானே என்ற கேள்விக்கு மிக மிக சரி. அவர்கள் மிக மோசமான முறையிலும், தவறான முறையிலும் இந்தத் தேர்தலை அணுகியுள்ளனர்.இது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் அடிதான். குறிப்பாக பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவு. அவர்களது கட்சியினர், தங்களது கட்சித் தலைமை செயல்பட்ட விதம் குறித்து பெரும் அதிருப்தியுடன் உள்ளனர் என்றார் ஐயர்.

    பிரணாப் முகர்ஜி குறித்து சொல்லுங்களேன் என்ற கேள்விக்கு, சந்தேகமே இல்லாமல் பிரணாப் முகர்ஜி நல்ல வேட்பாளர்தான். இது நல்லதேர்வுதான். அவருக்கு அரசிலும், அரசியல் சட்டத்திலும் நல்ல அறிவும், அனுபவமும் உண்டு. அவர் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டு நிச்சயம் வரலாறு படைப்பார். அதேசமயம், பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கப் போவதில்லை, அது நிச்சயம் அக்கட்சிக்கு அசவுகரியமான விஷயமும் கூட. காரணம், விதிமுறைகளின்படியே போகக் கூடியவர் பிரணாப் என்பதால்.
    நிச்சயம் 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சோதனையாகவே அமையும். சுய சந்தேகத்துடன்தான் அக்கட்சி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சிக்கு அதன் மீதே நம்பிக்கை இல்லை என்பதே உண்மை என்றார்.

    நிதீஷ் குமார் எடுத்த முடிவு சரியா என்ற கேள்விக்கு, நிதீஷ் குமார், தான் என்ன நினைக்கிறாரோ அதை அடைவதில் தெளிவாக இருக்கிறார். பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக தொடர்ந்து அமைதி காப்பதை அவர் விரும்பவில்லை. குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. அது முடிந்த பிறகு பாஜகவில் மோடி கை ஓங்கும் என்பதை நிதீஷ் குமார் அறிவார்.

    மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டாலும் கூட, பீகாரில் மோடியால், ஐக்கிய ஜனதாதளத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் நிதீஷ் குமார் அறிவார். காரணம், வாக்காளர்களில் கணிசமான பேர் மோடிக்கு எதிராகவே உள்ளனர் இதனால்தான் அவர் இந்த முறை பிடிவாதமாக இருந்துள்ளார் என்றார் ஐயர்.

    முலாயம் சிங் யாதவ் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி. தனக்கு என்ன தேவையோ அதை கடுமையாக போராடி கேட்டுப் பெறத் தயங்க மாட்டார். இப்போது கூட தனது மாநிலத்திற்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி தேவை என்ற பெரிய பட்டியலை அவரது மகனும், உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் தயாரித்து டெல்லிக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
    '
    பிரணாப்பை முதலில் சோனியா விரும்பவில்லை...!

    பிரணாப் முகர்ஜியை முதலிலேயே சோனியா காந்தி தேர்வு செய்தாரா அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்தாரா என்ற கேள்விக்கு ஐயர் பதிலளிக்கையில், சோனியாவின் முதல் சாய்ஸ் நிச்சயம் பிரணாப் இல்லை. அவர் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாத, புத்திசாலியான ஒருவரே குடியரசுத்தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரணாப் முகர்ஜி அரசியல் ரீதியாக அபிலாஷைகளுடன் இருந்து வந்த ஒருவர். எனவே அவரை முதலில் சோனியா காந்தி பரிசீலிக்கவே இல்லை.
    ஆனால் சூழ்நிலைகள் சோனியாவை பிரணாப் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து விட்டன. பிரணாப்புக்கு எதிராக மமதா பானர்ஜி பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியது, சரத்பவார், கருணாநிதி போன்றோர் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை இதற்கு முக்கியக் காரணம். பிரணாப்புக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அவரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்றார்.

    மமதா முன்பு 2 வழிகளே...

    மமதா பானர்ஜி என்ன செய்வார் என்ற கேள்விக்கு, மமதா பானர்ஜி முன்பு இப்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறி ஒதுங்கிக் கொள்வது. 2வது, சற்று அமைதி காத்து விட்டு கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவிப்பது.
    பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வாக்களிப்போம் என மமதா கூறினால், நிச்சயம் அவரது கட்சிக்குள்ளேயே பலரும் ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, மாற்றி ஓட்டுப் போட்டு விடுவார்கள். இது மமதாவுக்கும் தெரியும். அது அவரது முகத்தில் கரியடித்தது போலாகி விடும். மேலும் திரினமூல் காங்கிரஸ் கட்சியே பிளவுபடும் நிலையும் ஏற்படும். மமதாவின் இரும்புப் பிடியும் தளர்ந்து விடும். அந்த நிலையை அவர் விரும்புவாரா என்பது தெரியவில்லை.

    2004ல் கலாம்-சோனியா இடையே என்னதான் நடந்தது...?

    இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் யாரிடமும் இல்லை. அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்பதை கலாமோ அல்லது சோனியாவோதான் விளக்கியாக வேண்டும்.

    இருப்பினும் குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமை சந்தித்து விட்டுத் திரும்பிய சோனியா காந்தி, ஆழ்ந்த சிந்தனையுடன் திரும்பினார். தனது குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தினார். அதன் பின்னரே தன்னால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று அவர் அறிவித்தார்.

    இந்தியாவிலும், இத்தாலியிலும் கடைப்பிடிக்கப்படும் குடியுரிமை விதிமுறைகள் குறித்து ஏதாவது பேசினாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு இத்தாலியில் மேயர் பதவி மறுக்கப்பட்டது குறித்த சம்பவத்தை சோனியாவிடம் அவர் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலாம்தான் மெளனம் கலைக்க வேண்டும்.

    மோடியால் பிரதமராக முடியுமா...?

    பாஜகவுக்கு 200 எம்.பிக்களுக்கு மேல் சொந்தமாகவே கிடைத்தால் தாராளமாக மோடியால் பிரதமராக முடியும். அதைப் பெறும் முயற்சியில்தான் தற்போது மோடியும் தீவிரமாக இருக்கிறார்.
    ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறியாகும். இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக இன்னும் புண்பட்ட மனதுடன்தான் இருக்கின்றனர். அந்த புண்ணை ஆற்றும் பணிகளை இன்னும் மோடி செய்யவில்லை. அதைச் செய்தால் மட்டுமே அவரால் தேசிய அரசியல் பங்களிப்பு குறித்து யோசிக்க முடியும்.
    அவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க வேண்டும் மோடி. வளர்ச்சியை சாதித்துள்ளேன் என்று ரோபோட் போல கூறுவதை விட்டு விட்டு சாதாரண மனிதராக முதலில் அவர் மாற வேண்டும்.


    Posted by விழியே பேசு... at 4:54 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ▼  June (409)
      • வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா...
      • சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்
      • விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!( 4.14 Minutes )
      • தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்...
      • சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னி...
      • என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் ...
      • கொல்கத்தா மருத்துவ கல்லூரில் குண்டு வெடிப்பு- இருவ...
      • வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக...
      • லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக...
      • பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள்!! - மமதா அதிரடி
      • நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும்...
      • சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?
      • இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கி...
      • மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செ...
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் ச...
      • சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்
      • மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை...
      • மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ப...
      • நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை
      • ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்
      • 'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...
      • ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டிய...
      • கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டி...
      • நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்க...
      • ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படி...
      • செப்.5-க்குள் அரசியலிலிருந்து விலக வேண்டும்: சர்தா...
      • தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- 6 pack-கிற்கு ஆயத்த...
      • பெருந்துறை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ பிடித...
      • பாகிஸ்தானின் பல பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங்...
      • யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிப...
      • விஜயின் 'துப்பாக்கி' படத்தலைப்புக்கு நீதிமன்றம் தடை
      • இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: முதல்வராகிறார்...
      • கவர்ச்சி பதுமையாக என்னை பயன்படுத்துவதா?: இந்திய டெ...
      • ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த...
      • ராதாவின் இளைய மகளுக்கு மணிரத்னம் நடிப்பு பயிற்சி
      • சிறை நிரப்பும் போராட்டம்: எனக்கு பிரஷர், சுகர்- ஓட...
      • பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிற...
      • பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூ...
      • டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்தி...
      • பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவ...
      • பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத...
      • இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை
      • உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெய...
      • குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய...
      • நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்...
      • நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை
      • பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சி...
      • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ...
      • ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும...
      • பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கி...
      • தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் ...
      • விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி
      • சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா
      • இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...
      • நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்
      • கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி
      • நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்...
      • சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?
      • சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANC...
      • பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர...
      • ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம...
      • மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது
      • ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் ...
      • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேல...
      • யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தால...
      • சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்திய...
      • நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான...
      • கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
      • நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன...
      • விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
      • மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலக...
      • சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப...
      • நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
      • 'சகுனி' climax வீடியோ
      • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு
      • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 ...
      • இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது த...
      • பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
      • சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் ...
      • தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்...
      • திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்...
      • நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்ப...
      • இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்...
      • ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்
      • கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்...
      • அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும...
      • நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா
      • அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு...
      • யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை...
      • கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச...
      • ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ...
      • திருநங்கையாக ஜெயம் ரவி!
      • தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!
      • துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171...
      • பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
      • தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்த...
      • ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா
      • ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.