டைரக்டர் சற்குணத்தின் படத்தில் இருந்து நடிகை அமலா பால் நீக்கப்பட்டுள்ளார். களவாணி என்ற வெற்றப்படத்தை இயக்கிய டைரக்டர் சற்குணம், அடுத்து இயக்கவிருந்த புதிய படத்தின் நாயகியாக நடிகை அமலா பால் ஒப்பந்தமானார். நாயகனாக களவாணி நாயகன் விமலே நடிக்கிறார். சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடித்ததன் மூலம் கிடைத்த இலவச பப்ளிசிட்டியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அமலா பாலுக்கு நடிகர் விக்ரமுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னணி நடிகரான விக்ரமே விரும்பி அழைத்ததாலோ என்னவோ... அம்மணி சற்குணத்தின் படத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் விக்ரம் படத்திற்கு முன்பே சற்குணத்தின் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அமலா பாலின் தொடர் கால்ஷீட் சொதப்பலால் டென்ஷன் ஆன சற்குணம் இப்போது அந்த படத்தில் இருந்தே அமலா பாலை நீக்கி விட்டாராம். அட்வான்சோடு தொலையட்டும்; வேறு நடிகையை பாருங்க என்று கூறி விட்டாராம் படக்குழுவினருக்கு. இப்போது அமலா பாலுக்கு பதில் புதிய நடிகையை தேடிக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். ஏற்கனவே அமலா பால் டைரக்டர் முருகதாஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கும் கால்ஷீட் சொதப்பல்தான்.
No comments:
Post a Comment