பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் ஆடம்பர பங்களாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கூட்டுக் கொன்றனர். அந்த பங்களாவில் பின்லேடன் மற்றும் குழந்தைகளுடன் 5 ஆண்டுகளாக ரகசியமாக வாழ்ந்து வந்தார். தாக்குதல் சம்பவத்தில் தப்பிய பின்லேடனின் மனைவிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார். அவர் கூறுகையில், பின்லேடன் அபோதாபாத் பங்களாவில் மாடியில் தங்கி இருந்தார். அதில் 3 அறைகள் உள்ளன.
அமெரிக்க வீரர்கள் திடீர் என்று மாடியில் இறங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பின்லேடன் உயிர் இழந்ததும் அவரது உடலை மாடிப்படிகள் வழியாக தரதரவென்று இழுத்துக் கொண்டு கீழே வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் பின்லேடனின் மகளும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம், தனது தந்தையை அமெரிக்க வீரர்கள் கொன்று மாடிப்படிகள் வழியே இழுத்து வரப்பட்டதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பின்லேடன் அமெரிக்காவை பயமுறுத்தி வைத்திருந்தாலும் அவரது மறைவுக்கு பிறகு அவரது குழந்தைகள் எந்த நாட்டிலும் குடியுரிமை இன்றி இருக்கிறார்கள். 1994-ம் ஆண்டு சவுதி அரேபியா, பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்து விட்டது. அதன் காரணமாக அவரின் பிள்ளைகள் குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமை இல்லாது இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி கூறினார்.
பின்லேடனின் குழந்தைகளுக்கு 4 வயது முதல் 12 வயது இருக்கும். அவர்கள் ராவல்பிண்டியில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment