சென்னையில் கோடை காலத்தை சமாளிப்பது பெருங்கஷ்டம். வெளியில் மட்டும் வெயில் கொளுத்துவதில்லை. வீட்டிற்குள்ளும் அனலாய் தகிப்பதால் மக்கள் இரவில் தூக்கமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நடுத்தர மக்களும் வீடுகளில் ஏ.சி. பொருத்தி உள்ளனர். ஆனால் மின் அழுத்தக் குறைவு காரணமாக மின் விசிறி, ஏ.சி. சரியாக இயங்குவதில்லை. மின் அழுத்தம் குறைவாக இருந்தாலும் மின் கட்டணம் 4 மடங்கு எகிறி இருப்பது நுகர்வோரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
அமைந்தகரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறும்போது, கோடை காலத்தில் ஏ.சி. பயன்படுத்தினாலும் இதுவரை 500 யூனிட்டுகளை தாண்டியதில்லை. ஆனால் இம்முறை 649 யூனிட் காட்டுகிறது. மின் கட்டணம் 2,700 செலுத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளேன் என்றார்.
இதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறும்போது, கடந்த ஆண்டும் கோடையில் ஏ.சி. பயன்படுத்தினேன். அப்போது 650 யூனிட் வரை செலவானது. மின் கட்டணமாக 1,023 செலுத்தினேன். இந்த ஆண்டு 780 யூனிட் என்று காட்டுகிறது. மின் கட்டணம் 3 ஆயிரத்து 50 செலுத்தவேண்டி உள்ளது என்றார்.
இதேபோல் கார்த்திகேய புரத்தை சேர்ந்த பாபு கூறும்போது, கடந்த ஆண்டு கோடையில் மின் கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தினேன். இந்த ஆண்டு 9 ஆயிரத்து 100 வந்துள்ளது என்றார். இதேபோல அரும்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் மின் அழுத்தக் குறைவால் மின் பயனீட்டு அளவு அதிகரித்து மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த ஏப்ரல்-1 முதல் மின் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வை பொதுமக்கள் சகித்து கொண்டனர். ஆனால் தற்போது உருவாகி உள்ள இந்த மறைமுக மின் கட்டண தாக்குதல் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி மின்வாரிய என்ஜினீயர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மின் விநியோகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதனால் பயனீட்டு அளவு (யூனிட்) வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக மின் விநியோகம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது. பெரும்பாலான துணை மின் நிலையங்களில் கெப்பாசிட்டர் பேங்குகள் மற்றும் சின்டுரோன்ஸ் கண்டென்சர்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
இவற்றை பராமரித்தால்தான் இந்த ஏற்ற இறக்கத்தை தவிர்க்க முடியும் என்றார் நுகர்வோர்கள் ஏ.சி. அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் மின் அழுத்தக்குறைவு ஏற்படுகிறது என்று மின் வாரியம் கதை கட்டினாலும் பல கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு வருமானம் குவிந்துள்ளது என்பதுதான் உண்மை.
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நடுத்தர மக்களும் வீடுகளில் ஏ.சி. பொருத்தி உள்ளனர். ஆனால் மின் அழுத்தக் குறைவு காரணமாக மின் விசிறி, ஏ.சி. சரியாக இயங்குவதில்லை. மின் அழுத்தம் குறைவாக இருந்தாலும் மின் கட்டணம் 4 மடங்கு எகிறி இருப்பது நுகர்வோரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
அமைந்தகரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறும்போது, கோடை காலத்தில் ஏ.சி. பயன்படுத்தினாலும் இதுவரை 500 யூனிட்டுகளை தாண்டியதில்லை. ஆனால் இம்முறை 649 யூனிட் காட்டுகிறது. மின் கட்டணம் 2,700 செலுத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளேன் என்றார்.
இதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறும்போது, கடந்த ஆண்டும் கோடையில் ஏ.சி. பயன்படுத்தினேன். அப்போது 650 யூனிட் வரை செலவானது. மின் கட்டணமாக 1,023 செலுத்தினேன். இந்த ஆண்டு 780 யூனிட் என்று காட்டுகிறது. மின் கட்டணம் 3 ஆயிரத்து 50 செலுத்தவேண்டி உள்ளது என்றார்.
இதேபோல் கார்த்திகேய புரத்தை சேர்ந்த பாபு கூறும்போது, கடந்த ஆண்டு கோடையில் மின் கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தினேன். இந்த ஆண்டு 9 ஆயிரத்து 100 வந்துள்ளது என்றார். இதேபோல அரும்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் மின் அழுத்தக் குறைவால் மின் பயனீட்டு அளவு அதிகரித்து மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த ஏப்ரல்-1 முதல் மின் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வை பொதுமக்கள் சகித்து கொண்டனர். ஆனால் தற்போது உருவாகி உள்ள இந்த மறைமுக மின் கட்டண தாக்குதல் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி மின்வாரிய என்ஜினீயர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மின் விநியோகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதனால் பயனீட்டு அளவு (யூனிட்) வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக மின் விநியோகம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது. பெரும்பாலான துணை மின் நிலையங்களில் கெப்பாசிட்டர் பேங்குகள் மற்றும் சின்டுரோன்ஸ் கண்டென்சர்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
இவற்றை பராமரித்தால்தான் இந்த ஏற்ற இறக்கத்தை தவிர்க்க முடியும் என்றார் நுகர்வோர்கள் ஏ.சி. அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் மின் அழுத்தக்குறைவு ஏற்படுகிறது என்று மின் வாரியம் கதை கட்டினாலும் பல கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு வருமானம் குவிந்துள்ளது என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment