இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கியூபாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அங்குஅவர் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல்காஸ்ட்ரோ, துணை அதிபர் மகினோ முரிலோஜோர்ஸ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் ஹவானா சென்ற அவர் புரட்சியாளர் சேகுவேராவின் இல்லத்துக்கு சென்றார். அவரது மனைவி அலெடியா, மகன் கமிலோ மற்றும் மகளை சந்தித்தார்.
மேலும் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. தோல்வி அடைந்தது. பிடெல் காஸ்ட்ரோ உலகின் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர் கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார்.
மேலும் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. தோல்வி அடைந்தது. பிடெல் காஸ்ட்ரோ உலகின் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர் கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார்.

No comments:
Post a Comment