இலங்கையின் வடகிழக்கு பகுதியில் மீண்டும் முள்ளிவாய்க்கால் போன்ற நிலை ஏற்படும் என்று இலங்கை மந்திரி பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு தலைமை தாங்கினார். அப்போது இலங்கை அரசுடன் உள்ள உறவை துண்டிக்க வேண்டும், திமிராக பேசிய இலங்கை மந்திரியை கண்டிக்க வேண்டும். இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தில் இனப் படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இலங்கை மந்திரியின் கொடும்பாவி மற்றும் அந்த நாட்டு கொடியையும் எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாநில நிர்வாகிகள் விஞ்சை அரசன், இளஞ்சேகுவரா, நுங்கை அரசன், வெற்றிச் செல்வன், சைதை எஸ்.என்.பாலாஜி, பகலவன், வேலுமணி, மாவட்ட நிர்வாகிகள் கடம்பன், விடுதலை செல்வன், செந்தில்குமார் உள்பட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு தலைமை தாங்கினார். அப்போது இலங்கை அரசுடன் உள்ள உறவை துண்டிக்க வேண்டும், திமிராக பேசிய இலங்கை மந்திரியை கண்டிக்க வேண்டும். இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தில் இனப் படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இலங்கை மந்திரியின் கொடும்பாவி மற்றும் அந்த நாட்டு கொடியையும் எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாநில நிர்வாகிகள் விஞ்சை அரசன், இளஞ்சேகுவரா, நுங்கை அரசன், வெற்றிச் செல்வன், சைதை எஸ்.என்.பாலாஜி, பகலவன், வேலுமணி, மாவட்ட நிர்வாகிகள் கடம்பன், விடுதலை செல்வன், செந்தில்குமார் உள்பட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment