ஜனாதிபதி தேர்தலில் போட்டி உருவாகி உள்ளது. பிராணப் முகர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். இதனால் பிரணாப் முகர்ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை மாறி போட்டி உறுதியாகி விட்டது.
பி.ஏ.சங்மா ஏற்கனவே கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இடையில் மம்தா பானர்ஜியின் அதிரடி, பாரதீய ஜனதாவின் திணறல் காரணமாக சங்மா பொறுமையாக இருந்தார். தற்போது சங்மாவுக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இதையடுத்து கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட சங்மா முடிவு செய்துள்ளார். நேற்று மம்தா பானர்ஜியுடன் சங்மா டெலிபோனில் பேசினார். அப்துல்கலாம் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். மம்தா இதுபற்றி முடிவு எடுத்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிரோன் மணி அகாலிதளம் கட்சி தலைவர் பிரகாஷ் சிங்பாதவை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி சங்மா கூறியதாவது:-
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி ஆதரவு கேட்டேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களிடமும் பேசினேன். இன்று சிரோன்மணி அகாலிதளம் கட்சிதலைவர் பிரகாஷ்சிங் பாதவை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு பி.ஏ.சங்மா கூறினார்.
பிரணாப்முகர்ஜியை ஆதரிப்பதாக கூறியுள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்திக்கவும் சங்மா முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஏ.சங்மா ஏற்கனவே கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இடையில் மம்தா பானர்ஜியின் அதிரடி, பாரதீய ஜனதாவின் திணறல் காரணமாக சங்மா பொறுமையாக இருந்தார். தற்போது சங்மாவுக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இதையடுத்து கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட சங்மா முடிவு செய்துள்ளார். நேற்று மம்தா பானர்ஜியுடன் சங்மா டெலிபோனில் பேசினார். அப்துல்கலாம் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். மம்தா இதுபற்றி முடிவு எடுத்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிரோன் மணி அகாலிதளம் கட்சி தலைவர் பிரகாஷ் சிங்பாதவை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி சங்மா கூறியதாவது:-
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி ஆதரவு கேட்டேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களிடமும் பேசினேன். இன்று சிரோன்மணி அகாலிதளம் கட்சிதலைவர் பிரகாஷ்சிங் பாதவை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு பி.ஏ.சங்மா கூறினார்.
பிரணாப்முகர்ஜியை ஆதரிப்பதாக கூறியுள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்திக்கவும் சங்மா முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment