புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் ஆர்வம் காட்டும் நிலையில், தான் போட்டியிட விரும்பவில்லை என கலாம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான கபீர் சுமனிடம் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலுக்கு பிறகு பிரணாபுக்கு ஆதரவாக கபீர் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க, பிரணாப் முயற்சித்து வருவதாக, அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு எம்.பி.யான டெரிக் ஓப்ரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பிரணாப் முகர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது அரசியல் நெறிமுறை இல்லை. கட்சியை உடைக்க நினைத்தால் அதற்காக அவ்வளவு முயற்சி செய்தாலும் அது அவரால் முடியாது. மேலும் தேர்தலுக்காக ஆதரவு திரட்டும் அவர் எமது கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment