ஈரோடு மாவடத்தில் உள்ள நகப்பாளையத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் என்னும் கிராமத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த சுவரின் மீது கண்ணாடிகள் பதிக்கப்படு யாரும் இதைத் தாண்டி செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவருக்கு இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் 10 அடி தூரத்தில் உள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் செல்ல கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்றாவிட்டால் வரும் ஜூலை 2ம் தேதி நாங்களே இடிப்போம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட சாதிக்காரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை அங்கு வந்து கூட்டம் கூடக் கூடாது என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தது. இந்த பிரச்சனைக்கு சாதிக்காரர்களுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தாசில்தாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாக்குறுதி கொடுத்து 2 மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ளது சாதிச் சுவரே இல்லை என்றும் அந்த சுவர் அங்கே 20 ஆண்டுகளாக இருப்பதாகவும் சாதிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுவர் இடிந்ததால் அதை திரும்பக் கட்டியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment