புதிய ஜனாதிபதிக்கான தேர்தல், அடுத்த மாதம் (ஜுலை) 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள், வருகிற 30-ந் தேதியாகும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ, ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாததால், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற நீண்ட ஆலோசனைக்குப்பின், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சிகளும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டிவந்த பா.ஜனதாதான் தற்போது தனது வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்து வருவது பா.ஜனதாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில், கூட்டணியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்த முயன்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஆனால், கூட்டணியில் அதற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் பா.ஜனதா கட்சி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத குழப்பத்தில் உள்ளது.
அதே நேரத்தில் பி.ஏ.சங்மா, காங்கிரஸ் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசில் இருந்து நேற்று விலகி விட்டார். இதனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சங்மாவை ஆதரிக்கும் முடிவுக்கு பா.ஜனதா வந்தது. அதுபற்றி முடிவு செய்வதற்காக, பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை, அத்வானி வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சி தலைவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால், இன்று மீண்டும் பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற நீண்ட ஆலோசனைக்குப்பின், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சிகளும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டிவந்த பா.ஜனதாதான் தற்போது தனது வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்து வருவது பா.ஜனதாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில், கூட்டணியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்த முயன்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஆனால், கூட்டணியில் அதற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் பா.ஜனதா கட்சி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத குழப்பத்தில் உள்ளது.
அதே நேரத்தில் பி.ஏ.சங்மா, காங்கிரஸ் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசில் இருந்து நேற்று விலகி விட்டார். இதனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சங்மாவை ஆதரிக்கும் முடிவுக்கு பா.ஜனதா வந்தது. அதுபற்றி முடிவு செய்வதற்காக, பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை, அத்வானி வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சி தலைவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால், இன்று மீண்டும் பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.

No comments:
Post a Comment