கோவை பாலக்காடு பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது. ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாசர், ஜாபர் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். ஜலீல் மற்றும் ஒருவர் காயமின்றி தப்பினர். விபத்தின் போது காரின் முன்பக்க கதவு திறந்தது.
மறு நிமிடமே காருக்குள் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் விழுந்தன. சாலை முழுவதும் 500 ரூபாய் நோட்டுகளாக சிதறிக்கிடந்தன.
சாலையில் பணம் கொட்டிக்கிடப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் கையில் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவானார்கள்.
தகவல் அறிந்த மதுக்கரை போலீசாரும், வருமான வரித்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசாரும், வருமான வரித்துறையினரும் காருக்குள் இருந்த பணத்தை மீட்டு மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு எண்ணிப்பார்த்த போது அதில் 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 380 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் காரில் எவ்வளவு பணம் இருந்தது? அதில் பொதுமக்கள் அள்ளிச்சென்றது எவ்வளவு? என்பதை அறிய போலீசார் ஜலீலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் கொடுத்து அனுப்பியதாகவும், அவர் ரெயில்வேயில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் முஸ்தபாவை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அவரிடம் விசாரித்த போது நான் ரெயில்வேயில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறேன். அதில் கிடைத்த வருமானத்தில் பாலக்காட்டில் வீடு கட்டி வருகிறேன்.
மேலும் அந்த பகுதியில் மசூதி கட்ட ரூ.1 கோடி தருவதாக கூறியுள்ளேன். அதற்காக எனது ஊழியர்களிடம் ரூ.2½ கோடியை காரில் கொடுத்து அனுப்பினேன் என்றார்.
அப்படியானால் தற்போது 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 380 ரூபாய் தான் உள்ளது. சாலையில் சிதறிக்கிடந்த பணத்தில் ரூ.5 லட்சத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றது உறுதியாகியுள்ளது.
பணத்தை அள்ளிச் சென்றவர்கள் யார்? என்பதை அறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காரில் எடுத்து வரப்பட்ட பணத்துக்கு என்னிடம் முழுமையான ஆவணங்கள் உள்ளது.
அவற்றை போலீசில் ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று முஸ்தபா கூறிச்சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தால் தான் அது கணக்கில் உள்ள பணமா? அல்லது ஹவாலா பணமா? என்பது தெரியவரும்.
கோவையில் நடுரோட்டில் பணம் கொட்டிக் கிடந்ததும் அவற்றை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச்சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாசர், ஜாபர் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். ஜலீல் மற்றும் ஒருவர் காயமின்றி தப்பினர். விபத்தின் போது காரின் முன்பக்க கதவு திறந்தது.
மறு நிமிடமே காருக்குள் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் விழுந்தன. சாலை முழுவதும் 500 ரூபாய் நோட்டுகளாக சிதறிக்கிடந்தன.
சாலையில் பணம் கொட்டிக்கிடப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் கையில் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவானார்கள்.
தகவல் அறிந்த மதுக்கரை போலீசாரும், வருமான வரித்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசாரும், வருமான வரித்துறையினரும் காருக்குள் இருந்த பணத்தை மீட்டு மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு எண்ணிப்பார்த்த போது அதில் 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 380 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் காரில் எவ்வளவு பணம் இருந்தது? அதில் பொதுமக்கள் அள்ளிச்சென்றது எவ்வளவு? என்பதை அறிய போலீசார் ஜலீலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் கொடுத்து அனுப்பியதாகவும், அவர் ரெயில்வேயில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் முஸ்தபாவை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அவரிடம் விசாரித்த போது நான் ரெயில்வேயில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறேன். அதில் கிடைத்த வருமானத்தில் பாலக்காட்டில் வீடு கட்டி வருகிறேன்.
மேலும் அந்த பகுதியில் மசூதி கட்ட ரூ.1 கோடி தருவதாக கூறியுள்ளேன். அதற்காக எனது ஊழியர்களிடம் ரூ.2½ கோடியை காரில் கொடுத்து அனுப்பினேன் என்றார்.
அப்படியானால் தற்போது 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 380 ரூபாய் தான் உள்ளது. சாலையில் சிதறிக்கிடந்த பணத்தில் ரூ.5 லட்சத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றது உறுதியாகியுள்ளது.
பணத்தை அள்ளிச் சென்றவர்கள் யார்? என்பதை அறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காரில் எடுத்து வரப்பட்ட பணத்துக்கு என்னிடம் முழுமையான ஆவணங்கள் உள்ளது.
அவற்றை போலீசில் ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று முஸ்தபா கூறிச்சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தால் தான் அது கணக்கில் உள்ள பணமா? அல்லது ஹவாலா பணமா? என்பது தெரியவரும்.
கோவையில் நடுரோட்டில் பணம் கொட்டிக் கிடந்ததும் அவற்றை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச்சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment