ஹரப்பா நாகரிக காலமான சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மண்டைஓடு டெல்லி அருகேயுள்ள சந்தாயன் கிராமத்தில் கிடைத்துள்ளது.
இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து நதிக்கரையோரம் கி.மு. 3300 முதல் 1600ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியதாக புவியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளனர்.
சிந்து சமவெளிப்பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் போன்றவை இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவே இருந்துள்ளன.
தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இடங்களில் முந்தைய ஹரப்பா நாகரிக காலத்து மக்கள் வாழ்ந்த பகுதியின் எல்லை படர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் உ.பி.யில் அவ்வப்போது பண்டைக்காலத்து தொல்பொருள் ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பட் மாவட்டத்தில் செங்கல் தயாரிப்பதற்காக களிமண்ணை தோண்டும் பணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த ஒரு மண்டைஓடு கிடைத்துள்ளது. பவள மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செம்பினால் செய்யப்பட்ட கிரீடத்துடன் கிடைத்துள்ள இந்த மண்டைஓடு ஒரு முது மக்கள் தாழிக்குள் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது இந்த மண்டைஓட்டுக்கு உரிய நபர் உள்ளூர் மக்களின் தலைவராக வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகின்றது.
இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து நதிக்கரையோரம் கி.மு. 3300 முதல் 1600ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியதாக புவியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளனர்.
சிந்து சமவெளிப்பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் போன்றவை இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவே இருந்துள்ளன.
தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இடங்களில் முந்தைய ஹரப்பா நாகரிக காலத்து மக்கள் வாழ்ந்த பகுதியின் எல்லை படர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் உ.பி.யில் அவ்வப்போது பண்டைக்காலத்து தொல்பொருள் ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பட் மாவட்டத்தில் செங்கல் தயாரிப்பதற்காக களிமண்ணை தோண்டும் பணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த ஒரு மண்டைஓடு கிடைத்துள்ளது. பவள மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செம்பினால் செய்யப்பட்ட கிரீடத்துடன் கிடைத்துள்ள இந்த மண்டைஓடு ஒரு முது மக்கள் தாழிக்குள் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது இந்த மண்டைஓட்டுக்கு உரிய நபர் உள்ளூர் மக்களின் தலைவராக வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகின்றது.
No comments:
Post a Comment