தன்னை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என, தன் ஆதரவாளர்கள் மூலம், சகோதரி கனிமொழிக்கு, ஸ்டாலின் தூது அனுப்பிய தகவல் வெளியாகி இருக்கிறது.
கட்சியில், பொதுச் செயலர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த, பொருளாளர் ஸ்டாலின், அடுத்ததாக, முதல்வர் வேட்பாளர் மீது கண் பதித்திருக்கிறார்.அதற்காக, தன் ஆதரவாளர்கள் மூலம், இதற்கு எதிர்ப்பாக கட்சிக்குள் இருப்பவர்களை சமாதானப்படுத்தும், தீவிரத்தில் ஸ்டாலின் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.அந்த வகையில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் மகளிர் அணி மாநில செயலராகவும் இருக்கும் கனிமொழியை, முதற்கட்டமாக சமாதானப்படுத்தி, ஒப்புதல் பெறும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கட்சி வட்டாரத்தினர் கூறியதாவது:கட்சியில் பொருளாளராக இருக்கும் ஸ்டாலின், தன்னை பொதுச் செயலராக பதவி உயர்த்துவர் என, நினைத்தார். அதற்காக, நிறைய முயற்சித்தார். ஆனால், பொதுச் செயலர் பதவியை விட்டுக் கொடுக்க, அன்பழகன் தயார் இல்லை என்பதோடு, தன் முயற்சிக்கு, கட்சியின் தலைவர் கருணாநிதி மூலம் தடை போட்டார். இதனால், தன் முயற்சியில் இருந்து ஒதுங்கினார்.இதனால், ஸ்டாலினை காட்டிலும், அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு சென்று, அடுத்தகட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது, '2016ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலினை அறிவிக்க செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை, இப்போதே ஆரம்பிக்க வேண்டும்' என, ஸ்டாலினை சந்தித்த, கட்சியின் சில மாவட்ட செயலர்கள், தங்கள் யோசனையைக் கூறினர்.
அதை ஏற்காத ஸ்டாலின், 'என் உழைப்பு மீது நம்பிக்கை வைத்து, கருணாநிதியே முன்வந்து, அதை செய்ய வேண்டும்' என, சொல்லியிருக்கிறார். இருந்தும், தங்கள் கருத்தில் விடாப்பிடியாக இருந்த மா.செ.,க்கள், 'நீங்கள் அமைதியாக இருங்கள்; உங்களுக்காக களமிறங்குகிறோம்; கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசி, ஆதரவு திரட்டுகிறோம். முன்னதாக, கட்சியின் மகளிர் அணி செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் கனிமொழியை சந்தித்து பேசி, அவரது அனுமதியை பெறுகிறோம்' எனக் கூறினர்.
இதற்காக, ஸ்டாலின் தூதர்கள் சிலர், கனிமொழியை சந்தித்து பேசியிருக்கின்றனர்.'ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அனுமதித்தால், சட்டசபைத் தேர்தலில், 20 சதவீத 'சீட்'களை, உங்கள் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க, ஸ்டாலின் தயாராக இருக்கிறார்' என, தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், அதை ஏற்காத கனிமொழி, 'பொதுமக்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும், கருணாநிதி, முதல்வர் வேட்பாளராக இருந்தால் தான் ஏற்பர். அதனால், அவரைத் தான் தேர்தலில் முன்னிலைப்படுத்த வேண்டும்' என, சொல்லி அனுப்பி விட்டார். இதனால், தூது போனவர்கள் சோர்ந்து விட்டனர்.இவ்வாறு, அந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
கட்சியில், பொதுச் செயலர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த, பொருளாளர் ஸ்டாலின், அடுத்ததாக, முதல்வர் வேட்பாளர் மீது கண் பதித்திருக்கிறார்.அதற்காக, தன் ஆதரவாளர்கள் மூலம், இதற்கு எதிர்ப்பாக கட்சிக்குள் இருப்பவர்களை சமாதானப்படுத்தும், தீவிரத்தில் ஸ்டாலின் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.அந்த வகையில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் மகளிர் அணி மாநில செயலராகவும் இருக்கும் கனிமொழியை, முதற்கட்டமாக சமாதானப்படுத்தி, ஒப்புதல் பெறும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கட்சி வட்டாரத்தினர் கூறியதாவது:கட்சியில் பொருளாளராக இருக்கும் ஸ்டாலின், தன்னை பொதுச் செயலராக பதவி உயர்த்துவர் என, நினைத்தார். அதற்காக, நிறைய முயற்சித்தார். ஆனால், பொதுச் செயலர் பதவியை விட்டுக் கொடுக்க, அன்பழகன் தயார் இல்லை என்பதோடு, தன் முயற்சிக்கு, கட்சியின் தலைவர் கருணாநிதி மூலம் தடை போட்டார். இதனால், தன் முயற்சியில் இருந்து ஒதுங்கினார்.இதனால், ஸ்டாலினை காட்டிலும், அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு சென்று, அடுத்தகட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது, '2016ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலினை அறிவிக்க செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை, இப்போதே ஆரம்பிக்க வேண்டும்' என, ஸ்டாலினை சந்தித்த, கட்சியின் சில மாவட்ட செயலர்கள், தங்கள் யோசனையைக் கூறினர்.
அதை ஏற்காத ஸ்டாலின், 'என் உழைப்பு மீது நம்பிக்கை வைத்து, கருணாநிதியே முன்வந்து, அதை செய்ய வேண்டும்' என, சொல்லியிருக்கிறார். இருந்தும், தங்கள் கருத்தில் விடாப்பிடியாக இருந்த மா.செ.,க்கள், 'நீங்கள் அமைதியாக இருங்கள்; உங்களுக்காக களமிறங்குகிறோம்; கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசி, ஆதரவு திரட்டுகிறோம். முன்னதாக, கட்சியின் மகளிர் அணி செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் கனிமொழியை சந்தித்து பேசி, அவரது அனுமதியை பெறுகிறோம்' எனக் கூறினர்.
இதற்காக, ஸ்டாலின் தூதர்கள் சிலர், கனிமொழியை சந்தித்து பேசியிருக்கின்றனர்.'ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அனுமதித்தால், சட்டசபைத் தேர்தலில், 20 சதவீத 'சீட்'களை, உங்கள் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க, ஸ்டாலின் தயாராக இருக்கிறார்' என, தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், அதை ஏற்காத கனிமொழி, 'பொதுமக்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும், கருணாநிதி, முதல்வர் வேட்பாளராக இருந்தால் தான் ஏற்பர். அதனால், அவரைத் தான் தேர்தலில் முன்னிலைப்படுத்த வேண்டும்' என, சொல்லி அனுப்பி விட்டார். இதனால், தூது போனவர்கள் சோர்ந்து விட்டனர்.இவ்வாறு, அந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment