பலத்தை நிரூபிக்கவும், பா.ஜ.,விற்கு பாடம் புகட்டவும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் அடுத்தடுத்த புறக்கணிப்பால், அதிருப்தி அடைந்த விஜயகாந்த், இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகுவது, கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
முந்தைய தி.மு.க., ஆட்சியின் போதும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்த, பல சட்டசபை இடைத்தேர்தல்களை, தே.மு.தி.க., சந்தித்துள்ளது. இதன் மூலம், தன் ஓட்டு வங்கியையும் அக்கட்சி நிரூபித்துள்ளது. லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்ததால், அடுத்த மாதம், 13ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணியின் முடிவுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்டது.
யாரும் பேசவில்லை:
அதனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட்டால், அந்தக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொள்ளலாம் என, தீர்மானித்தார். ஆனால், தமிழக பா.ஜ.,வினரோ, அந்தக் கட்சியின் தேசிய தலைவர்களோ, இது தொடர்பாக விஜயகாந்திடம் எதுவும் பேசவில்லை; சந்தித்து ஆதரவு கேட்கவும் இல்லை. இதனால் கோபமடைந்த விஜய காந்த், சென்னை வந்திருந்த அமித் ஷாவை நேற்று சந்திக்க நினைத்தார். ஆனால், அவரை சந்திப்பதை அமித் ஷா தவிர்த்து விட்டார். இந்த விவகாரத்தால் எரிச்சல் அடைந்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், பா.ஜ.,வின்ஆதரவு இல்லாமல், தே.மு.தி.க.,வை தனித்துப் போட்டியிட வைக்கவும், விரைவில் வேட்பாளரை அறிவிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை வைத்து, 'தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி' என, பா.ஜ., கூறி வருகிறது. இதனால், விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வரும், 2016ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரை களமிறக்கவும், பா.ஜ., தரப்பு திட்டமிட்டு வருகிறது. இதனால், பா.ஜ.,விற்கு பாடம் புகட்டவும், கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் முடிவிற்கு விஜயகாந்த் வந்துள்ளார். இதற்காக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது, 'கடந்த லோக்சபா தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் மட்டும், 19 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளார். அதனால், இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிட வேண்டும்' என, நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.அதேநேரத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கத்தில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு, 2,000 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது என்பதையும், தே.மு.தி.க., நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.
மாற்றம் ஏற்படும்:
அதனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, தே.மு.தி.க.,வே என நிரூபிக்க முடியும் என்று, விஜயகாந்த் நம்புகிறார். விரைவில், வேட்பாளரை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். பா.ஜ., நிர்வாகிகள் விஜயகாந்தை நேரடியாக சந்தித்து, ஆதரவு கேட்டால் மட்டுமே, அவரின் முடிவில் மாற்றம் ஏற்படும். மேலும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, விஜயகாந்தை சந்திக்காமல்புறக்கணிப்பதும், விஜயகாந்தின் தனித்துப் போட்டி முடிவுக்கு ஒரு காரணம். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
மனு தாக்கல் இன்று துவக்கம்:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால், காலியான ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம், 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், இன்று காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது. ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ., வுமான மனோகரன், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான காதர்மொய்தீன் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
முந்தைய தி.மு.க., ஆட்சியின் போதும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்த, பல சட்டசபை இடைத்தேர்தல்களை, தே.மு.தி.க., சந்தித்துள்ளது. இதன் மூலம், தன் ஓட்டு வங்கியையும் அக்கட்சி நிரூபித்துள்ளது. லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்ததால், அடுத்த மாதம், 13ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணியின் முடிவுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்டது.
யாரும் பேசவில்லை:
அதனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட்டால், அந்தக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொள்ளலாம் என, தீர்மானித்தார். ஆனால், தமிழக பா.ஜ.,வினரோ, அந்தக் கட்சியின் தேசிய தலைவர்களோ, இது தொடர்பாக விஜயகாந்திடம் எதுவும் பேசவில்லை; சந்தித்து ஆதரவு கேட்கவும் இல்லை. இதனால் கோபமடைந்த விஜய காந்த், சென்னை வந்திருந்த அமித் ஷாவை நேற்று சந்திக்க நினைத்தார். ஆனால், அவரை சந்திப்பதை அமித் ஷா தவிர்த்து விட்டார். இந்த விவகாரத்தால் எரிச்சல் அடைந்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், பா.ஜ.,வின்ஆதரவு இல்லாமல், தே.மு.தி.க.,வை தனித்துப் போட்டியிட வைக்கவும், விரைவில் வேட்பாளரை அறிவிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை வைத்து, 'தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி' என, பா.ஜ., கூறி வருகிறது. இதனால், விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வரும், 2016ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரை களமிறக்கவும், பா.ஜ., தரப்பு திட்டமிட்டு வருகிறது. இதனால், பா.ஜ.,விற்கு பாடம் புகட்டவும், கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் முடிவிற்கு விஜயகாந்த் வந்துள்ளார். இதற்காக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது, 'கடந்த லோக்சபா தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் மட்டும், 19 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளார். அதனால், இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிட வேண்டும்' என, நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.அதேநேரத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கத்தில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு, 2,000 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது என்பதையும், தே.மு.தி.க., நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.
மாற்றம் ஏற்படும்:
அதனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, தே.மு.தி.க.,வே என நிரூபிக்க முடியும் என்று, விஜயகாந்த் நம்புகிறார். விரைவில், வேட்பாளரை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். பா.ஜ., நிர்வாகிகள் விஜயகாந்தை நேரடியாக சந்தித்து, ஆதரவு கேட்டால் மட்டுமே, அவரின் முடிவில் மாற்றம் ஏற்படும். மேலும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, விஜயகாந்தை சந்திக்காமல்புறக்கணிப்பதும், விஜயகாந்தின் தனித்துப் போட்டி முடிவுக்கு ஒரு காரணம். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
மனு தாக்கல் இன்று துவக்கம்:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால், காலியான ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம், 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், இன்று காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது. ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ., வுமான மனோகரன், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான காதர்மொய்தீன் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
No comments:
Post a Comment