குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம், அதனால் பலன் இல்லை, அதிக குழந்தைகளைப் பெற்று ஆந்திராவின் மக்கள் தொகையைப் பெருக்குங்கள் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள என்.டி. ராமராவ் நினைவிடத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக சந்திரபாபு நாயுடு 18 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வேலிவேணு கிராமத்தில் இந்த யாத்திரையைத் தொடங்கிய அவர் பிரமணாகூடம் கிராமத்தில் நிறைவுசெய்தார்.
பின்னர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் பேசுகையில், “ஆந்திர மாநில மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுகக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது மக்கள் தொகையைப் பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
படித்தவர்கள் பலர் இன்று திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதில்லை. நாட்டில் 9 லட்சம் சிசு மரணம் ஆண்டொன்றுக்கு நிகழ்கிறது, இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஜப்பான் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இங்கும் அந்த நிலைதான் ஏற்படுகிறது.
இதனால், நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம், அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளின் படிப்பை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பை எனது அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும்.
குச்சிப்பிடி நடனம் ஆந்திர மாநில சொத்து. இந்த கலை அழிந்து வருகிறது. எனவே குடும்பத்துக்கு ஒருவர் குச்சிப்பிடி நடனத்தை கற்க வேண்டும்”. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள என்.டி. ராமராவ் நினைவிடத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக சந்திரபாபு நாயுடு 18 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வேலிவேணு கிராமத்தில் இந்த யாத்திரையைத் தொடங்கிய அவர் பிரமணாகூடம் கிராமத்தில் நிறைவுசெய்தார்.
பின்னர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் பேசுகையில், “ஆந்திர மாநில மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுகக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது மக்கள் தொகையைப் பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
படித்தவர்கள் பலர் இன்று திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதில்லை. நாட்டில் 9 லட்சம் சிசு மரணம் ஆண்டொன்றுக்கு நிகழ்கிறது, இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஜப்பான் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இங்கும் அந்த நிலைதான் ஏற்படுகிறது.
இதனால், நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம், அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளின் படிப்பை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பை எனது அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும்.
குச்சிப்பிடி நடனம் ஆந்திர மாநில சொத்து. இந்த கலை அழிந்து வருகிறது. எனவே குடும்பத்துக்கு ஒருவர் குச்சிப்பிடி நடனத்தை கற்க வேண்டும்”. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
No comments:
Post a Comment