நாடு முழுவதும் ராணுவ அமைச்சக கட்டுப்பாட்டுக்கு கீழ் வரும் கண்டோன்மென்ட் போர்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் டெல்லி கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர் பணத்தை வாரி கூட்டத்தின் மீது வீசியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் 11,000 ஏக்கரை கொண்ட கண்டோன்மென்ட் பகுதியில் பொது சுகாதாரம், தெரு விளக்கு மற்றும் இதர வசதிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கண்டோன்மென்ட் போர்டுக்கு உண்டு. எனவே தான் இதை கைப்பற்ற அரசியல் கட்சியினர் மத்தியில் போட்டி ஏற்படுகிறது.
அப்படித்தான் டெல்லி கண்டோன்மென்ட் போர்டுக்கான எட்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நந்த் கிஷோர் பெனிவால் தேர்தலில் வெற்றி பெற்றதும் கூடி இருந்த மக்கள் கூட்டத்தில் பணத்தை அள்ளி வீசினார். அவரது இச்செயலுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து பணம் வீசிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment