அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கின் அப்பீல் மனு மீதான விசாரணையின்போது, அன்பழகன் என்ன வழக்கறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்த்துக்கொள்ள கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணையின்போது, அன்பழகன் சட்டத்துக்கு முன் வாதிட முடியுமா என்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
“அவர் (அன்பழகன்) என்ன வழக்கறிஞரா? ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டரீதியாக வாதிட அவருக்கு அனுபவம் இருக்கிறதா? இது குறித்து அவர் ஆராய்ச்சி எதுவும் மேற்கொண்டுள்ளாரா? இது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மேலும், சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக கட்சி சார்பாக தலையிட அன்பழகனை அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது.” என்றார் நீதிபதி காட்டமாக. இந்த அப்பீல் மனு விசாரணையின் போது அன்பழகனை நீதிபதி கண்டிப்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்த்துக்கொள்ள கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணையின்போது, அன்பழகன் சட்டத்துக்கு முன் வாதிட முடியுமா என்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
“அவர் (அன்பழகன்) என்ன வழக்கறிஞரா? ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டரீதியாக வாதிட அவருக்கு அனுபவம் இருக்கிறதா? இது குறித்து அவர் ஆராய்ச்சி எதுவும் மேற்கொண்டுள்ளாரா? இது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மேலும், சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக கட்சி சார்பாக தலையிட அன்பழகனை அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது.” என்றார் நீதிபதி காட்டமாக. இந்த அப்பீல் மனு விசாரணையின் போது அன்பழகனை நீதிபதி கண்டிப்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment