தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிஜாமாபாத் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கவிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில், காய்ச்சல், சளி தொந்தரவு அதிகமானதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கவிதாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுள்ளதாகவும், இதற்கான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராகி வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment