சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணி செய்பவர் சரண்யா (26). இவருடைய கணவரும் போலீஸ்காரர். இந்நிலையில், இவரது செல்போனுக்கு கடந்த 7ம் தேதியில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய வாலிபர் சரண்யாவிடம் காதல்மொழி பேசியுள்ளார்.
இதற்கு, சரண்யா எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மேலும், நானும் எனது கணவரும் போலீஸ். நீ பேசிய தகவல் என் கணவருக்கு தெரிந்தால் விபரீத முடிவு ஏற்படும் என்று எச்சரித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனாலும் அந்த ஆசாமி தொடர்ந்து அவருக்கு போன் செய்தும், எஸ்எம்எஸ்களையும் அனுப்பி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்யா இது குறித்து எழும்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போன் ஆசாமியை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி சரண்யாவை போன் மூலம் சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு பேச வைத்து எழும்பூர் காவல்நிலையம் அருகில் வர செய்தனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் டிப்டாப் உடையில் இன்று காலை எழும்பூர் காவல் நிலையம் வந்தார்.
அங்கு தயாராக இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த பார்த்திபன் (21) என்பது தெரியவந்தது. பெயின்டிங் வேலை பார்த்து வரும் அவர் ரீசார்ஜ் கடையில் இருந்து சரண்யாவின் தொலைபேசி எண்ணை எடுத்து பேசியதாக போலீசில் தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு, சரண்யா எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மேலும், நானும் எனது கணவரும் போலீஸ். நீ பேசிய தகவல் என் கணவருக்கு தெரிந்தால் விபரீத முடிவு ஏற்படும் என்று எச்சரித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனாலும் அந்த ஆசாமி தொடர்ந்து அவருக்கு போன் செய்தும், எஸ்எம்எஸ்களையும் அனுப்பி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்யா இது குறித்து எழும்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போன் ஆசாமியை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி சரண்யாவை போன் மூலம் சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு பேச வைத்து எழும்பூர் காவல்நிலையம் அருகில் வர செய்தனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் டிப்டாப் உடையில் இன்று காலை எழும்பூர் காவல் நிலையம் வந்தார்.
அங்கு தயாராக இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த பார்த்திபன் (21) என்பது தெரியவந்தது. பெயின்டிங் வேலை பார்த்து வரும் அவர் ரீசார்ஜ் கடையில் இருந்து சரண்யாவின் தொலைபேசி எண்ணை எடுத்து பேசியதாக போலீசில் தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment