முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுனந்தா மரணம் தொடர்பாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட இறுதி மருத்துவ அறிக்கையில், சுனந்தாவின் உடலில் விஷம் கலந்து இருந்தால் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் கடந்த 1–ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை குழுவினர் சசி தரூரை வசந்த் விகார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில் சுனந்தாவின் நெருங்கிய நண்பரான தேஜ் சராப் (வயது 77) இது குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சுனந்தா 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதாவது அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது கணவரும் எனது கோவா வீட்டுக்கு வந்தனர். சுனந்தா சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அவர் கடற்கரையில் ஒரு முறை, படகில் ஒரு முறை என்று 2 தடவை மயங்கி விழுந்தார்.
சுனந்தா கை நிறைய மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு நான் சரியாகத் தூங்குவது இல்லை. நான் தூங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் நான் ஆல்பிராக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை எடுத்து வருகிறேன் என்றார். இது உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்று நான் அவரிடம் கூறினேன்.
சுனந்தா ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக சுனந்தா உளறினார். என கூறி உள்ளார்.
இந்த நிலையில் சுனந்தா மரணம் தொடர்பாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட இறுதி மருத்துவ அறிக்கையில், சுனந்தாவின் உடலில் விஷம் கலந்து இருந்தால் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் கடந்த 1–ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை குழுவினர் சசி தரூரை வசந்த் விகார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில் சுனந்தாவின் நெருங்கிய நண்பரான தேஜ் சராப் (வயது 77) இது குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சுனந்தா 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதாவது அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது கணவரும் எனது கோவா வீட்டுக்கு வந்தனர். சுனந்தா சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அவர் கடற்கரையில் ஒரு முறை, படகில் ஒரு முறை என்று 2 தடவை மயங்கி விழுந்தார்.
சுனந்தா கை நிறைய மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு நான் சரியாகத் தூங்குவது இல்லை. நான் தூங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் நான் ஆல்பிராக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை எடுத்து வருகிறேன் என்றார். இது உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்று நான் அவரிடம் கூறினேன்.
சுனந்தா ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக சுனந்தா உளறினார். என கூறி உள்ளார்.
No comments:
Post a Comment