விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு நர்மதா (வயது 3), ராகுல் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ராகுல் பிறந்த சில மாதங்களில் அவனது உடலில் தானாக தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பின்னர் தானாக தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தீக்காயத்துக்கு சிகிச்சை அளித்து அனுப்பிவிட்டனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 9–ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார். அப்போது குழந்தையின் கால் பகுதியில் திடீரென்று தீக்காயம் ஏற்பட்டது. மயிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜேஸ்வரியின் முதலாவது ஆண் குழந்தை ராகுல் பிறந்த 7–வது நாளில் தீப்பற்றியது போலவே தற்போது 2–வது ஆண் குழந்தை பிறந்து 7–வது நாளில் தீப்பற்றி இருப்பது நெடுமோழியனூர், மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளின் உடலிலும் தீப்பற்றிய சம்பவங்கள் நடந்ததால் அவரது தாயார் ராஜேஸ்வரியின் உடல்நிலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலையும் டாக்டர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.
குழந்தையின் உடலில் தீப்பற்றியது குறித்து திண்டிவனம் தாசில்தார் (பொறுப்பு) கோட்டீஸ்வரி, மண்டல துணை தாசில்தார் அலெக்சாண்டர், கிராம நிர்வாக அலுவலர் மங்கையர்கரசி ஆகியோர் நெடுமோழியனூர் கிராமத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையை பார்வையிட்டு அங்குள்ள டாக்டர்களிடம் குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
வருவாய் துறையினர் கூறும்போது, குழந்தைக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இது குறித்த விசாரணை அறிக்கை ஓரிரு நாட்களில் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
சிறப்பு டாக்டர்கள் தீப்பற்றி எரியும் குழந்தையை இன்று பரிசோதிக்க உள்ளனர். அதன் பின்னர் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 9–ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார். அப்போது குழந்தையின் கால் பகுதியில் திடீரென்று தீக்காயம் ஏற்பட்டது. மயிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜேஸ்வரியின் முதலாவது ஆண் குழந்தை ராகுல் பிறந்த 7–வது நாளில் தீப்பற்றியது போலவே தற்போது 2–வது ஆண் குழந்தை பிறந்து 7–வது நாளில் தீப்பற்றி இருப்பது நெடுமோழியனூர், மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளின் உடலிலும் தீப்பற்றிய சம்பவங்கள் நடந்ததால் அவரது தாயார் ராஜேஸ்வரியின் உடல்நிலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலையும் டாக்டர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.
குழந்தையின் உடலில் தீப்பற்றியது குறித்து திண்டிவனம் தாசில்தார் (பொறுப்பு) கோட்டீஸ்வரி, மண்டல துணை தாசில்தார் அலெக்சாண்டர், கிராம நிர்வாக அலுவலர் மங்கையர்கரசி ஆகியோர் நெடுமோழியனூர் கிராமத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையை பார்வையிட்டு அங்குள்ள டாக்டர்களிடம் குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
வருவாய் துறையினர் கூறும்போது, குழந்தைக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இது குறித்த விசாரணை அறிக்கை ஓரிரு நாட்களில் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
சிறப்பு டாக்டர்கள் தீப்பற்றி எரியும் குழந்தையை இன்று பரிசோதிக்க உள்ளனர். அதன் பின்னர் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment