விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, March 24, 2012

    யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு


    யார் என்ன சொன்னாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கேட்க மாட்டோம். இலங்கை சுயாட்சி மிக்க நாடு. இங்கு வேறு யாருக்கும் இடமில்லை, என்று திமிராகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

    ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை தோற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

    களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

    பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    முப்பதாண்டு காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையில் நாட்டுக்கு எதிரான அந்நிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

    2005 ஆம் ஆண்டு நாம் இந்த நாட்டின் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறுதான் கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

    பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

    2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பயனின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.

    இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளி நாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.

    இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.

    சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

    அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் எடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபிட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.

    இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன.

    ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பெரும் அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன.

    எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.

    இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

    இது சுயமான ஆட்சி நடக்கும் நாடு. யார் சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.


    Posted by விழியே பேசு... at 6:12 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.