சரிதா நாயர் நடித்துள்ள ’குல்புகாரன்டே பார்யா’ என்ற திரைப்படத்தை 24 மணி நேரத்தில் 1 லடசத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இது தவிர, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறினார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார்.
மேலும், சரிதா நாயரின் நிர்வாண படங்கள் இணைய தளத்தில் வெளியானது. ‘வாட்ஸ் அப்‘-இல் தன்னுடைய நிர்வாண காட்சிகள் வெளியானதற்கு காவல்துறை அதிகாரிதான் காரணம், சரிதாநாயர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், ’கல்ஃபுகாரன்டே பார்யா’ (வீடியோ) (வளைகுடா நாட்டுக்காரனின் மனைவி) என்ற இந்த படத்தில் அரபு நாட்டில் பணிபுரியம் ஒரு தொழிலாளியின் மனைவியாக இவர் நடித்துள்ள திரைப்படம் வெளியாகியுள்ளது. தனிமையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளியின் மனைவி சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
வெறும் 15 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த படம் நேற்று முன்தினம் யூடியூபில் வெளியானது. படம் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
இது குறித்து முன்னமே கருத்துத் தெரிவித்திருந்த சரிதா நாயர், ”எனது நடிப்பை எப்படி பார்வையாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் எனது எதிர்கால திட்டம் இருக்கிறது. ஆனால் திரைப்படங்களில் நடிப்பதை மிகவும் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment