காதலிப்பது பெரிய கலை என்று ஹன்சிகா கூறினார். ஹன்சிகாவின் ‘ஆம்பள’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. சிம்புவுடன் நடிக்கும் வாலு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், சித்துவுடன் நடிக்கும் உயிரே உயிரே படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகின்றன.
விஜய்யுடன் புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கினார். இப்போது இருவரும் பிரிந்துள்ளனர். காதல் பற்றி ஹன்சிகா கூறியதாவது:–
காதலிப்பது சாதாரண விஷயம் இல்லை. பெரிய கலை. பெண்களை விட ஆண்களுக்கு இந்த கலை எளிதாக வரும். ஆண்கள் காதலிக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்கள் கண்களை பார்த்தாலே தெரிந்து விடும். சிலர் பார்வையாலேயே காதலை சொல்வார்கள். பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்ப்பார்கள். காதலை எளிதாக சொல்லி விடவும் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் காதலிக்கிறார்களா? என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.
காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துதான் காதலை சொல்வார்கள். சொந்த அனுபவம் மூலம் இவற்றை நான் தெரிந்து கொண்டதாக யாரும் கருத வேண்டாம். காதலிக்கும் தோழிகளை பார்த்துதான் இவற்றை அறிந்தேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
விஜய்யுடன் புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கினார். இப்போது இருவரும் பிரிந்துள்ளனர். காதல் பற்றி ஹன்சிகா கூறியதாவது:–
காதலிப்பது சாதாரண விஷயம் இல்லை. பெரிய கலை. பெண்களை விட ஆண்களுக்கு இந்த கலை எளிதாக வரும். ஆண்கள் காதலிக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்கள் கண்களை பார்த்தாலே தெரிந்து விடும். சிலர் பார்வையாலேயே காதலை சொல்வார்கள். பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்ப்பார்கள். காதலை எளிதாக சொல்லி விடவும் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் காதலிக்கிறார்களா? என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.
காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துதான் காதலை சொல்வார்கள். சொந்த அனுபவம் மூலம் இவற்றை நான் தெரிந்து கொண்டதாக யாரும் கருத வேண்டாம். காதலிக்கும் தோழிகளை பார்த்துதான் இவற்றை அறிந்தேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
No comments:
Post a Comment