இங்கிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க சிகரெட்டு பாக்கெட்டுகளில் பிராண்டு பெயர்கள் மற்றும் லோகோவை அச்சிட தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. வரும் மே மாதம் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்னதாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, சிகரெட்டு பாக்கெட்டுகளின் லேபிலில் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்கள் மட்டுமே அச்சிடப்படும். வேறெந்த கிராபிக்ஸூம் லேபிலில் இருக்காது. இதற்கு 'பிளெய்ன் சிகரெட் பேக்கேஜிங்' என்று பெயர். இந்த விசித்திரமான சட்டத்தை முதன்முதலில் 2012-ல் கொண்டு வந்தது ஆஸ்திரேலியாதான்.
இந்த புதிய மசோதாவுக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி்.க்களும் ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்க உள்ளதால் மார்ச் மாத இறுதிக்குள் மசோதா நிறைவேற்றப்பட்டு 2016-ம் ஆண்டு அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் முதல் அங்கு காரில் புகைப்பிடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
பிளெயின் பேக்கேஜிங் செய்வதால் சிகரெட்டு பாக்கெட்டுகளை பார்க்கும் போது வாங்குபவர்களுக்கு தங்கள் உடல்நலம் பற்றி ஒரு பாசிட்டிவ் இம்பேக்ட் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக சிறுவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, சிகரெட்டு பாக்கெட்டுகளின் லேபிலில் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்கள் மட்டுமே அச்சிடப்படும். வேறெந்த கிராபிக்ஸூம் லேபிலில் இருக்காது. இதற்கு 'பிளெய்ன் சிகரெட் பேக்கேஜிங்' என்று பெயர். இந்த விசித்திரமான சட்டத்தை முதன்முதலில் 2012-ல் கொண்டு வந்தது ஆஸ்திரேலியாதான்.
இந்த புதிய மசோதாவுக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி்.க்களும் ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்க உள்ளதால் மார்ச் மாத இறுதிக்குள் மசோதா நிறைவேற்றப்பட்டு 2016-ம் ஆண்டு அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் முதல் அங்கு காரில் புகைப்பிடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
பிளெயின் பேக்கேஜிங் செய்வதால் சிகரெட்டு பாக்கெட்டுகளை பார்க்கும் போது வாங்குபவர்களுக்கு தங்கள் உடல்நலம் பற்றி ஒரு பாசிட்டிவ் இம்பேக்ட் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக சிறுவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment