டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 7–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதை அறிய கடந்த வாரம் புதிய கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பு முடிவுகளை ஏ.பி.பி. நியூஸ் – நீல்சன் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
அதில் டெல்லி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் பா.ஜ.க.–34, ஆம்ஆத்மி–28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் யாரும் ஆட்சி அமைக்க முடியாதபடி இழுபறியே ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 இடங்கள் வேண்டும். இந்த மேஜிக் எண்ணை எந்த கட்சியும் எட்டாது என்று கூறப்படுகிறது. என்றாலும் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முயலும் என்கிறார்கள்.
கிரண்பேடி பா.ஜ.க.வில் சேரும் முன்பு இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இப்போது பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடைசியாக கடந்த 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம்ஆத்மி –28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சிக்கு 17 இடங்களே கிடைக்கும் என்ற கூறப்பட்டு இருந்தது. ஒரே மாதத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களே பெறும் என்று எல்லா கருத்து கணிப்புகளிலும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் மீண்டும் நேரடி போட்டி நிலவுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதை அறிய கடந்த வாரம் புதிய கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பு முடிவுகளை ஏ.பி.பி. நியூஸ் – நீல்சன் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
அதில் டெல்லி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் பா.ஜ.க.–34, ஆம்ஆத்மி–28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் யாரும் ஆட்சி அமைக்க முடியாதபடி இழுபறியே ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 இடங்கள் வேண்டும். இந்த மேஜிக் எண்ணை எந்த கட்சியும் எட்டாது என்று கூறப்படுகிறது. என்றாலும் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முயலும் என்கிறார்கள்.
கிரண்பேடி பா.ஜ.க.வில் சேரும் முன்பு இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இப்போது பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடைசியாக கடந்த 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம்ஆத்மி –28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சிக்கு 17 இடங்களே கிடைக்கும் என்ற கூறப்பட்டு இருந்தது. ஒரே மாதத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களே பெறும் என்று எல்லா கருத்து கணிப்புகளிலும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் மீண்டும் நேரடி போட்டி நிலவுகிறது.
No comments:
Post a Comment