ஆசியாவின் பணக்கார உள்ளாட்சி அமைப்பான பிரிஹன்மும்பை நகராட்சிக்கு (பிஎம்சி) இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 31,178 கோடி ரூபாய். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மும்பை நகராட்சிக்குச் சொந்தமானது அக்வோர்த் நகராட்சி மருத்துவமனை. 100 நோயாளிகள் இருக்கும் இந்த மருத்துவமனையில் இருப்பதோ 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு வார்ட் பாய் மட்டுமே. இதனால், அனைத்து நோயாளிகளையும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு மருத்துவமனையில் தஞ்சம் அடைந்திருக்கும் தொழுநோயாளிகள் தங்கள் சக நோயாளிகள் படும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றனர். பல வருடங்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் ராமன் தினமும் தரைகளை சுத்தப்படுத்தி வருகிறார்.
சாவந்த என்பவரோ தொழுநோயாளிகளின் காயத்திற்கு கட்டு போட்டு வருகிறார். மருத்துவர்கள் இதை செய்ய மறுக்கின்றனர். அதனால் தங்களுக்குள் உதவிக் கொள்வதாக அவர் கூறுகிறார். மும்பையில் உள்ள 65% தொழுநோயாளிகளை இலாப நோக்கற்ற மற்றும் அரசு-சாரா அமைப்புக்கள் கவனித்து வருகின்றன.
35% நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் நகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் 10% தொழு நோயாளிகள் எந்த கவனிப்பும் இல்லாத பிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு மருத்துவமனையில் தஞ்சம் அடைந்திருக்கும் தொழுநோயாளிகள் தங்கள் சக நோயாளிகள் படும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றனர். பல வருடங்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் ராமன் தினமும் தரைகளை சுத்தப்படுத்தி வருகிறார்.
சாவந்த என்பவரோ தொழுநோயாளிகளின் காயத்திற்கு கட்டு போட்டு வருகிறார். மருத்துவர்கள் இதை செய்ய மறுக்கின்றனர். அதனால் தங்களுக்குள் உதவிக் கொள்வதாக அவர் கூறுகிறார். மும்பையில் உள்ள 65% தொழுநோயாளிகளை இலாப நோக்கற்ற மற்றும் அரசு-சாரா அமைப்புக்கள் கவனித்து வருகின்றன.
35% நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் நகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் 10% தொழு நோயாளிகள் எந்த கவனிப்பும் இல்லாத பிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment